• May 19 2024

வீட்டை விட்டு வெளியே போன பாக்கியா.. ராதிகா எடுத்த முடிவு- பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய்டிவியில் பரபரப்பாகவும் பல்வேறு திருப்பங்களுடன் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கிய லட்சுமி. இந்த சீரியலில் தற்பொழுது கோபியின் ரகசிய காதல் பற்றிய அனைத்து விடயங்களும் தெரிந்து விட்டது. அதிரடி திருப்பங்களுடன் ஒளிபரப்பாகும் இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கப்போகின்றது என்பதை பார்ப்போம்…

பாக்கியா இனி இந்த வீட்டில் ஒரு ஏமாளியா இருக்க மாட்டேன் என கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே கிளம்பிவிட்டார். செல்வியும் எழிலும் அவருடன் பின்னாடியே செல்ல இந்த பக்கம் கோபி அதிர்ச்சி அப்படியே நின்று கொண்டிருக்க இனிய ஒரு பக்கம் அழ செழியன் உங்ககிட்ட இருந்து இதையெல்லாம் எதிர்பார்க்கவே இல்லை என சொல்லிவிட்டு உள்ளே சென்று விடுகிறார்.

பின்னர் ஈஸ்வரி ஊரெல்லாம் உன்ன பத்தி பெருமையா பேசி இருந்தேன் ஆனா நீ இப்படி எல்லாம் பண்ணுவேன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. இப்ப பாக்கியா வீட்டை விட்டு போயிட்டா திரும்ப வருவாளா கூட தெரியல.

மேலும் அம்மா இல்லாத வீட்டில் நான் இருக்க மாட்டேன் நானும் எங்கேயாவது போயிடுவேன் என கூறுகிறார்.

பாக்கியா அப்படியே நடந்து சமைக்கும் இடத்திற்கு சென்று விட்டு அங்கு எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கின்றார். செல்வி எதையாவது பேசுகா இப்படி இருக்காத என கோபி பற்றி சொன்னதெல்லாம் நீ கேட்கல இன்னைக்கு எங்க கொண்டு வந்து விட்டு இருக்கு பாரு என புலம்புகிறார்.

மேலும் ராதிகா மயூவின் ஸ்கூலில் டிசி வாங்க கிளம்ப அப்போது அவருடைய அண்ணனும் அம்மாவும் கோபி பாக்கியா தான் மனைவி என்பதை தவிர வேறு என்ன தப்பு செய்தார்? ஒரு பிரச்சனையில் இருந்து ஓடி ஒளிஞ்சி இன்னொரு பிரச்சனை கோபி செய்ததை மறந்து அவருடன் சேர்ந்து வாழ்ந்த எல்லாத்துக்கும் ஒரு முடிவு கிடைக்கும் என அறிவுரை கூறுகின்றனர். இதனால் ராதிகா எடுக்க போகும் முடிவு என்ன என்ற எதிர்பார்ப்போடு இன்றைய எபிசோட் முடிவடைகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement