• May 19 2024

பாக்கியா ஒரு துரோகி..! வீட்டாருக்கு அதிர்ச்சி கொடுத்த கோபி! உண்மையை உடைத்த நிலா! ஈஸ்வரி எடுத்த ஆவேச முடிவு?

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றை தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

அதில், அமிர்தா, செல்வி ஆகியோர் நிலா பாப்பாவுடன் வீட்டுக்கு வர, செல்வி அப்படியே நைசா நழுவி கொள்ள முயற்சி செய்கிறார். ராமமூர்த்தி வந்து நிலாவை கூப்பிடுகிறார்.

அங்கு வந்த ஈஸ்வரி, பாக்கியா எங்கே என கேட்க, அங்க அம்மாவுக்கு இன்னும்  வேலை முடியல. மிஸ்டர் மேடம் பாக்கணும்னு சொன்னாங்க. அதனால எங்களை மட்டும் அனுப்பி வச்சுட்டாங்கன்னு சொல்லி சமாளிக்கிறார் அமிர்தா.

ராமமூர்த்தி எல்லோரும் சேர்ந்து வரவேண்டியது தானே சொல்ல, நானும் அதைத்தான் சொன்னேன். ஆனா அக்கா எங்கள முதல்ல அனுப்பி வச்சிட்டு என்ற நம்ப வைக்கிறார் செல்வி.

பிறகு அங்க எங்கெல்லாம் போனீங்க? ஜாலியா இருந்தீங்களா? என்று நிலாவிடம் ராமமூர்த்தி கேட்க, அங்க புது அத்தை, மாமா  எல்லாரையும் பார்த்தேன் என்று சொல்ல, ஈஸ்வரிக்கு சந்தேகம் வருகிறது.


இதை தொடர்ந்து வீட்டுக்கு வந்த கோபி, கல்யாணம் நின்று போன விஷயத்தை பாக்கியா கல்யாணம் செய்து வைத்த விஷயத்தையும் சொல்ல, எல்லாரும் அதிர்ச்சி அடைகிறார்கள். 

அதுபோல ஈஸ்வரி செழியன் குழந்தையை தூக்கிக்கொண்டு குலதெய்வ கோவிலுக்கு போனதையும், பாக்கியா அதை தடுத்து குழந்தையை ஜெனியிடம் கொடுத்த விஷயத்தையும், பாக்கியா என்ன அசிங்கப்படுத்திட்டா என்றும் சொல்கிறார் ஈஸ்வரி.

இவ்வாறு நடந்த விஷயங்களை எல்லாம் கேட்டு, உச்சகட்ட கோபத்தில் பாக்கியா வரட்டும் என்று   ஈஸ்வரி ஆவேசத்தில் இருக்க, அந்த நேரத்தில் அமிர்தா கீழே இறங்கி வர அவரிடம் கோபப்படுகிறார்.

மேலும் கலெக்டரை பார்க்க குன்னக்குடிக்கு எதுக்கு பாக்கியா போனா என அமிர்தாவிடம் கேட்க , அவர் அதிர்ந்து போகிறார். மேலும் கோபி போய் இருந்த கல்யாண பொண்ணு தான் ராஜி என்ற உண்மையை ராமமூர்த்தி உடைக்கிறார்.

அதன் பிறகு செழியன் வந்ததும் பாட்டி உனக்காக ஒரு விஷயம் பண்றாங்க என்றால் நீ பாட்டிக்கு தானே சப்போர்ட் பண்ணி இருக்கணும் என்று கோபி செழியனிடம் கேட்கிறார்.

மேலும், என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லணும் என்று உனக்கு தோணலையா? இப்ப உங்க அம்மாவால பாட்டிக்  தான் அவமானம். உங்க அம்மா பண்ணது பெரிய தப்பு, பெரிய துரோகம் என்று ஏற்றி விடுகிறார் கோபி.  இதுதான் இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.


Advertisement

Advertisement