• May 08 2024

பிரியங்காவின் மருமகளா இது... செம க்யூட்டாக இருக்காங்களே... வெளியான புகைப்படம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தொகுப்பாளினி பிரியங்காவைத் தெரியாதவர்கள் என்று தமிழகத்தில் யாருமே இருக்க முடியாது. இவர் பல ஆண்டுகளாக விஜய் டீவியில் தொகுப்பாளினியாகவே பணி புரிந்து வருகின்றார். அத்தோடு நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 5 இல் 18 போட்டியாளர்களில் ஒருவராகவும் கலந்து கொண்டிருக்கின்றார். அதுமட்டுமன்றி அப்போட்டியில் 2 ஆவது இடத்தையும் தட்டிச் சென்றிருக்கின்றார்.



மேலும் இவர் பிக்பாஸ் செல்வதற்கு முன்பு விஜய் டீவியில் 'சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக், காமெடி ராஜா, கலக்கல் ராணி' என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். ஒருமுறை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் விருந்தினராக வந்த இசையமைப்பாளர் அனிருத்திடம் உங்களுக்கு விஜய் டீவியில் பிடித்த ஷோ எது என மாகாபாவும், பிரியங்காவும் கேட்டனர். அப்போது அனிருத் 'ஸ்டார்ட் மியூசிக்' என்று சொன்ன உடனே பிரியங்கா மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார். 



இவ்வாறாக பிரியங்காவை பிடிக்காதவர்கள் என்று யாருமே இருக்க முடியாது. அதிலும் குறிப்பாக பிரியங்காவும், மாகாபாவும் சேர்ந்து அடிக்கும் லூட்டிகள் தான் பார்வையாளர்களுக்கு ரொம்ப பிடிக்கும்.



பிரியங்கா தொலைக்காட்சியில் மட்டுமன்றி எப்போதும் சோஷியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருப்பார். அதில் அடிக்கடி தன்னுடைய படங்கள், போட்டோஷூட் என பலவற்றையும் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வார். மேலும் பிரியங்கா தேஷ்பாண்டே எனும் பெயரில் சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றையும் வைத்துள்ளார்.



இந்நிலையில் இவர் தற்போது தனது தம்பியின் குழந்தையுடன் எடுத்த புகைப்படம் ஒன்றினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கின்றார். அதுமட்டுமல்லாது அக்குழந்தையின் முகம் தெரியக்கூடிய வகையில் அப்புகைப்படம் அமைந்திருக்கின்றது. அதுமட்டுமல்லாது இப்பதிவில் "தங்கமே ஆன்டி கிட்ட வாம்மா" எனவும் குறிப்பிட்டிருக்கின்றார் நம்ம பிரியங்கா.



Advertisement

Advertisement

Advertisement