• Apr 02 2025

எதிர்நீச்சல் சீரியலில் அடுத்தடுத்து புதிய திருப்பங்கள்! தர்சினியை கடத்திய புதிய வில்லன்? புதிய போலீஸ் போர்ஸ்?

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியலில் ஒன்றுதான் எதிர்நீச்சல். இந்த சீரியலில் வெளியான ப்ரோமோவில்இனி என்ன நடக்கும் என்பதை பார்ப்போம்.

சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் இறுதியாக தர்ஷினியை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக ஜெயிலிலிருந்து ஜீவானந்தம் தப்பித்த நிலையில், அது குணசேகரனுக்கு பிரச்சினையாக இருக்கிறது.

அதே சமயம் தர்சினியை கண்டுபிடிப்பதற்காக இந்த சீரியலில் ஸ்பெஷல் போலீஸ் டீம் ஒன்று அதிரடியாக கிளம்பி உள்ளது.


அதாவது, தர்ஷனியை கண்டுபிடித்து தருமாறு முதல்வரிடம் ஜனனி சென்று கோரிக்கை விடுத்த நிலையில், முதல்வர் அவர்களுக்காக புதிய போலிஸ் அணி ஒன்றை இறக்கி, தர்ஷினியை கண்டுபிடிக்க உதவுகிறார். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை  பெற்றுள்ளது.

எனவே ஒரு பக்கம் ஜீவானந்தம் தப்பித்துள்ள நிலையில், மறுபக்கம் போலீஸ் டீம் ஒன்றும் புதிதாக இறங்குகின்றது.


இந்த நிலையில், தர்ஷினியை கடத்தி வைத்திருக்கும் புதிய வில்லனாக புதிய நபர் ஒருவர் இந்த சீரியலில் என்ட்ரி  கொடுத்துள்ளார். 

ஆகவே இனி வரும் நாட்களில் அவருக்கான பின்னணி கதை? எதற்காக  தர்ஷினியை கடத்தி வைத்து இருக்கிறார்? அவர்  குணசேகரனின் நண்பரா? எதிரியா?  என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement