• May 12 2024

சூர்யாவின் வணங்கான் திரைப்படத்திற்கு ஏற்பட்ட புதிய சிக்கல்- அட இவரே இந்த படத்திலிருந்து விலகி விட்டாரா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் சூர்யா தற்பொழுது இயக்குநர் பாலா இயக்கத்தில் தனது 41வது படத்தில் நடித்து வருகின்றார்.2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

படப்பிடிப்பு பூஜையுடன் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டு கன்னியாகுமாரியில் நடைபெற்று வருகின்றது.இப்படத்தில் சூர்யா மீனவராக நடிப்பதாக கூறப்படுகிறது. கன்னியாகுமரியை அடுத்து மதுரையில் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது. இது 40 நாட்கள் ஷெட்யூல்.

அதனை தொடர்ந்து படக்குழுவினர் கோவாவிற்கு செல்ல உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்நிலையில் அண்மையில் பாலா பிறந்தநாளை முன்னிட்டு இந்தப்படத்தின் டைட்டில் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டனர். அதன்படி 'வணங்கான்' என்ற டைட்டிலுடன் புதிய போஸ்டர் ஒன்று வெளியானது.

இந்த அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த சூர்யா, 'உங்களுடன் மீண்டும் இணைந்ததில் பெருமகிழ்ச்சி. பிறந்தநாள் வாழ்த்துக்கள்' என குறிப்பிட்டிருந்தார்.இந்நிலையில் 'வணங்கான்' படத்திலிருந்து கேமரா மேன் பாலசுப்பிரமணியம் விலகியுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டதை விட நீண்டு கொண்டே செல்வதால் பாலசுப்ரமணியம் சூர்யாவிடம் பேசி 'வணங்கான்' படத்திலிருந்து விலகியுள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து தற்போது ஓம் பிரகாஷ் இந்தப்படத்தில் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement