• May 10 2024

எங்கள் காதல் வாழ்க்கை சிறப்பாகப் போவதற்கு இது தான் காரணம்- குடும்ப ரகசியத்தைக் கூறிய சினேகா

stella / 1 year ago

Advertisement

Listen News!

என்னவளே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியவர் தான் சினேகா. இப்படத்தில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து ஆனந்தம், பார்த்தாலே பரவசம், பம்மல் கே சம்பந்தம், ஏப்ரல் மாதத்தில், வசீகரா, பார்த்திபன் கனவு ,வசூல்ராஜா எம்பிபிஎஸ் , ஆட்டோகிராப் என்று பல வெற்றி படங்களில் நடித்திருக்கின்றார்.

தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடா என்று பல மொழிகளிலும் நடித்து இருக்கின்றார்.இவர் கடந்த 2012ம் ஆண்டு நடிகர் பிரசன்னாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.தற்போது இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளதோடு தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடியாகவும் விளங்குகின்றனர்.

இந்த நிலைலயில் தங்களது திருமண வாழ்க்கை பற்றி சினேகா அண்மையில் கூறியதாவது " கிட்டத்தட்ட நான் 75 படங்களுக்கு மேல் நடித்து விட்டேன். ஒரு படத்தில் நடித்தவர்கள் மற்றொரு படத்தில் நடிப்பதற்குள்ளையே மாறி விடுகிறார்கள் அவர்களது நடவடிக்கை ஆட்டிட்யூட் அனைத்தும் மாறி விடுகின்றன.

ஆனால் பிரசன்னாவை நான் முதல் நாள் எப்பொழுது பார்த்தேனோ அப்போது முதல் இன்று வரை அவர் மாறவே இல்லை. நல்ல விஷயங்களுக்காக ஒருவர் மாறினால் தப்பில்லை. ஆனால் பிரபலமான பிறகு தேவையில்லாத விஷயங்களுக்காக தங்களை மாற்றிக் கொள்வது எனக்கு பிடிக்காத விஷயம். எனக்கான கம்ஃபோர்ட்டை பிரசன்னா கொடுத்துள்ளார்.

பல பேருக்கு அது கிடைப்பதில்லை. நண்பர்களாக இருக்கும் போதே என்னைப் பற்றி அனைத்து விஷயம் அவருக்கு தெரியும். அன்று முதல் இன்று வரை அவர் மாறாமல் இருப்பது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இதுவே எங்கள் வெற்றிக்கு காரணம் என்று நடிகை சினேகா கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement