• Jul 27 2024

தப்பு செய்துவிட்டேன்.. ‘ஆர்.ஆர்.ஆர்’ முடிந்த பிறகு ‘பாகுபலி 3’ இயக்கி இருக்க வேண்டும்: எஸ்.எஸ்.ராஜமெளலி

Sivalingam / 2 months ago

Advertisement

Listen News!

இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய ’பாகுபலி’ மற்றும் ’பாகுபலி 2’ ஆகிய இரண்டு படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அந்த படத்தின் மூன்றாம் பாகம் எப்போது வரும் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் அவர் பேட்டி அளித்த போது ‘ஆர்.ஆர்.ஆர்’ படம் முடிந்த பிறகு நான் ’பாகுபலி 3’ படத்தை தான் இயக்கியிருக்க வேண்டும், ஆனால் தப்பு செய்துவிட்டேன், தற்போது மகேஷ் பாபு படத்திற்கான வேலையை தொடங்கி உள்ளேன் என்று அவர் கூறியுள்ளதாக தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

’பாகுபலி’ ’பாகுபலி 2’ மற்றும் ‘ஆர்.ஆர்.ஆர்’ ஆகிய மூன்று படங்கள் தொடர்ச்சியாக ஹிட் அடித்த நிலையில் தற்போது அவர் மகேஷ் பாபு நடிப்பில் உருவாக இருக்கும் திரைப்படத்தை இயக்க ஆரம்ப கட்ட பணிகளை செய்து வருகிறார். அந்த படம் முடிய கிட்டதட்ட இரண்டு ஆண்டுகள் ஆகும் என்றும் மகேஷ் பாபு அதுவரை வேறு எந்த படத்திலும் நடிக்க கூடாது என்றும் நிபந்தனை விதித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்திற்காக ஆறு மாதங்களுக்கு முன்பே கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் ஆரம்பம் ஆகிவிட்டதாகவும் அமேசான் காடுகளில் இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் ’பாகுபலி’ படத்தின் அனிமேஷன் படம் வெளியான நிலையில் அதில் பேசிய எஸ்.எஸ்.ராஜமெளலி  ’பாகுபலி’ படத்தின் இரண்டாம் பாகத்தை அடுத்து மூன்றாம் பாகம் எடுக்கும் ஐடியா இருந்தது என்றும் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தை முடித்தவுடன் நான் அந்த படத்தை இயக்கி இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இருப்பினும் கண்டிப்பாக ‘பாகுபலி 3’ படம் எடுக்கும் ஐடியா உள்ளது என்றும் பிரபாஸிடம் இது குறித்து ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தி உள்ளேன் என்றும் எஸ்.எஸ்.ராஜமெளலி கூறியுள்ளார்.

Advertisement

Advertisement