• May 20 2024

சரஸ்வதியைக் கண்டதும் தெரியாதது போல நடந்த நடேசன்- ராகினி மீது கடும் கோபத்தில் இருக்கும் வசு- தமிழுக்கு அடித்த லக்

stella / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும்.அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடைபெறவுள்ளது என்று பார்ப்போம்.

சரஸ்வதியின் மாமனார் சரஸ்வதியைக் கண்டதும் பார்க்காதது போல திரும்பி வருகின்றார். அப்போது சரஸ்வதி மாமா மாமா நில்லுங்க என்று கத்திக் கொண்டே பின்னால் வருகின்றார். இதனால் அவருடைய மாமா நான் சரஸ்வதியைக் காணாமல் வந்தது போல சொல்கின்றார். அத்தோடு ஜாக்கிங் வந்ததாகவும் சொல்கின்றார்.

பின்னர் சரஸ்வதியிடம் உண்மையைச் சொல்லி விடுகின்றார்.ராகினி வீட்டில செய்த கலாட்டாவால் கோதை இந்த பங்சனுக்கு உங்களை கூப்பிட வேணாம் என்று சொன்னதாக சொல்கின்றார். இதனால் சரஸ்வதி சரி கவலைப்படாதீங்க மாமா நாங்க இந்த பங்சனுக்கு வரக்கூடாது என்று இருக்குப் போல என்று சொல்லி விட்டு வீட்டுக்குச் செல்கின்றார்.


வீட்டுக்குச் சென்றதும் சரஸ்வதி நடந்ததைச் சொல்ல நமச்சி கோபப்படுகின்றார். அப்போது தமிழ் நாம அங்க போகாதது தான் நல்லம் நம்ம வேலையை பார்போம் என்று சொல்கின்றார்.அந்த நேரம் தமிழ் இருக்கும் வீட்டு ஓனர் வந்து தமிழிடம் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் 60ம் கல்யாணம் பண்ணப்போவதாக வந்து என்கிட்ட சொன்னாங்க, நீங்களும் இந்த பங்சனுக்கு கட்டாயம் போகனும் என்று சொல்கின்றார்.

நீங்க இந்த பங்சனுக்கு போனால் உங்கட வாழ்க்கைக்கு தான் ரொம்ப நல்லம் அவங்க ஆசீர்வாதம் கிடைச்சால் உங்களுக்கு குழந்தைகளும் கிடைக்கும் என்று சொல்கின்றார்.இதனைக் கேட்ட சரஸ்வதி வசுவுக்கு போன் பண்ணி சொல்கின்றார்.வசுவும் கவலைப்படாதீங்க சரஸ் ராகினி எதுக்கெடுத்தாலும் வீட்டை விட்டு போறேன் என்று சொல்லுறா போகவேண்டியது தானே நாங்க மட்டும் எங்க அம்மா கூடவா இருக்கிறோம் என்று சொல்லி திட்ட சரஸ்வதி அந்த அர்ஜுன் சொல்லித் தான் அவ இப்பிடி எல்லாம் பண்ணுறா என்று சொல்கின்றார்.

அப்போது வசு நீங்க கட்டாயம் இந்த பங்சனுக்க வருவீங்க அதுக்கேற்றமாதிரி ஏதாவது பண்ணுவோம் என்று சொல்கின்றார்.பின்னர் மாமனாரிடம் ஏதாவது பண்ணி மாமாவையும் சரஸ்வதியையும் இந்த பங்சனுக்கு வரவைக்கனும் என்று சொல்கின்றார்.பின்னர் ராகினிக்கு அவரது மாமியார் ஜுஸ் கொடுக்க அதை அர்ஜுன் வாங்கி பருக வைக்கின்றார். அப்போது கோதை வந்து ராகினியின் நலம் பற்றி விசாரிக்கின்றார்.


தொடர்ந்து அங்கு வரும் நடேசன் இந்த பங்சன் வீட்டில வைக்க வேணாம் என்று சொல்ல எல்லோரும் கேள்விக்கு மேல கேள்வி கேட்க வசு மாமா என்ன சொல்ல வருகிறார் என்று கேளுங்க என்று சொல்ல நடேசன் அந்த பங்சனை வீட்டில வைக்கிறதை விட கோயிலில் வைச்சால் குடும்பத்திற்கு நல்லதாம். அதனால கோயிலில் இதை வைப்போம் என்று சொல்ல கோதையும் சம்மதிக்கின்றார்.

பின்னர் தமிழ் தன்னுடைய ஆபிஸில் இருக்க அங்கு வரும் அவரது பாட்னர் தமிழை புதுக்கம்பனி ஒன்று விலைக்கு வருது அதை நீங்க வாங்கினால் நல்லம் என்று ஐடியா கொடுக்கின்றார். அத்தோடு இனி வருகின்ற ஆடர்ஸ் எதையும் மற்றக் கம்பனிக்கு விட்டுக் கொடுக்காமல் நீங்களே டுங்க என்றும் சொல்கின்றார்.இதனால் தமிழ் புதுக்கம்பனியை வாங்கலாமா வேண்டாமா என் யோசிக்கின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.



Advertisement

Advertisement