மலையாள நடிகர் டோவினோ தாமஸின் 2493 எப்.டி படப்பிடிப்பில் முகமூடி அணிந்த மர்ம ஆசாமிகள் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் தான் நடிகர் டோவினோ தாமஸ்.
மேலும் இவர் தமிழில் தனுஷ் நடித்த மாரி 2 படத்தில் வில்லனாக நடித்திருந்தார். சமீபத்தில் கீர்த்தி சுரேஷுடன் அவர் இணைந்து நடித்த வாஷி திரைப்படம் வெளியானது.
இந்நிலையில் தற்போது 2493 எப்.டி. என்ற படத்தில் நடித்து வருகிறார் டோவினோ தாமஸ். இந்தப் படத்தை இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்குகிறார்.
மேலும் இவர் ஏற்கனவே ஓம் சாந்தி ஓசானா, ஒரு முத்தாசி கதா, சாராஸ் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது கோட்டயம் அருகிலுள்ள பஞ்சிபாலத்தில் நடந்து வருகின்றது.
இதற்கிடையே முகமூடி அணிந்த மர்ம நபர்கள் சிலர் 2493 எப்.டி படப்பிடிப்புக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். அப்போது மேக்கப் மேன் மிதுன் ஜித் என்பவரை கடுமையாக அடித்து உதைத்துள்ளனர்.
அத்தோடு அவர் மீது பலமாக தாக்குதல் நடத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். எதற்காக இந்த தாக்குதல் எனத் தெரியவில்லை. தற்போது இது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- பாலிவுட்டில் களமிறங்கும் நடிகர் விஜய்சேதுபதி-வைரலாகும் புகைப்படங்கள்..!
- இயக்குநர் ஷங்கர் பட பெயரில் நடந்த மோசடி…நடந்தது என்ன..?
- சீரியலில் மட்டும் தான் அடக்கம்-கவர்ச்சியில் அதகளம் காட்டும் ப்ரியங்கா குமார்..!
- தனுஷ் ரசிகர்களுக்கு வெளியான அடுத்தடுத்து இரண்டு அறிவிப்புகள்..யாரும் எதிர்பார்கலையே..!
- இனிமேல் படங்கள் இயக்கமாட்டேன் – பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!