• Sep 21 2024

எனது 23 வயதில் அம்மா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்- நீண்ட பதிவினைப் போட்ட பிரபல சீரியல் நடிகை

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபல்யமானவர் தான் கல்யாணி. இவர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ஜெயம் படத்தில் சதாவின் தங்கையாக நடித்து அசத்தியிருந்தார். இதனைத் தொடர்ந்து குறும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

2001 முதல் 2009 வரை தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இது தவிர சின்னத்திரையில் 8 சீரியல்கள் மெயின் ரோலில் நடித்துள்ளார், தொகுப்பாளராகவும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கின்றார்.

இந்த நிலையில் இவர் கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரோஹித் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவருக்கு ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் நடிகை கல்யாணி தனது தாயை பற்றி ஒரு அதிர்ச்சி தகவல் இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.

அதில் அவர் டிசம்பர் 24, 2014ம் ஆண்டு எல்லோரும் வருட முடிவில் சந்தோஷம் இருந்திருப்பீர்கள். ஆனால் நான் அன்றைய தினம் சந்தித்த விஷயம் பெரிய துக்கமான விஷயம். எனது தாய் அன்று தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். என்ன செய்வது என்று கூட அப்போது எனக்கு புரியவில்லை. எனது தாய் இறக்கும் போது எனக்கு 23 வயது என ஒரு நீண்ட பதிவு போட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement