• May 18 2024

“முடியாதுமூடிட்டு போடி” பிரபல சீரியல் நடிகையை திட்டிய காஜல்- ஏன் இவ்வளவு கோபம் என கேட்டு வரும் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

சன் மியூசிக் தொலைக்காட்சியில் ஆங்கராக தனது பயணத்தை ஆரம்பித்து பல சீரியல்களிலும் திரைப்படங்களிலும் நடித்து பிரபல்யமானவர் தான் காஜல் பசுபதி. இவர் பிரபல நடன இயக்குநரான சாண்டி மாஸ்டரைக் காதலித்து திருமணம் செய்தார். இருப்பினும் சில காரணங்களால் அவரைப் பிரிந்து தனித்து வாழ்கின்றார்.

வெள்ளித்திரையில் பிஸியான நடிகையாக வலம் வரும் இவர் சன்டிவியில் ஒளிபரப்பாகும் கண்ணாண கண்ணே சீரியலில் நடித்து வந்தார். சோஷியல மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் காஜல் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிடுவதோடு ரீல்ஸ்களை ஷேர் செய்தும் வருகின்றார்.

இந்த நிலையில் சமீபத்தில் சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதி சிம்புடன் சேர்த்து வைக்கும்படி அவரின் வீட்டுக்கு முன்பு நின்று கொண்டு அடம்பிடித்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் சேர் செய்து இருந்தார்.பப்ளிசிட்டிக்காக தான் ஸ்ரீநிதி இதுபோன்று செய்து வருவதாகவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், ஸ்ரீநிதி 10 வருடம் ஒருதலை காதல் என சிம்பு வீட்டுக்கு முன்பு நின்று கொண்டு வெளியிட்ட புகைப்படத்தை காஜல் பசுபதி தனது ஃபேஸ்புக்கில் பகிர்ந்து, “முடியாதுமூடிட்டு போடி” என்று கூறியுள்ளார். இந்த போஸ்டை பார்த்து ஷாக்கான ரசிகர்கள், காஜலிடம் ஏன் இவ்வளவு கோபம் என கேட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement