• Sep 21 2024

'எனது நோக்கம் மக்களை மகிழ்விப்பதே தவிர யாரையும் புண்படுத்துவதல்ல' திடீரென மாயாவுக்கு பெருகும் மக்கள் ஆதரவு! பின்னணியில் இப்படியொரு சம்பவமா?

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது நாளுக்கு நாள் மேலும் சூடு பிடிக்கின்றது. அதிலும் சனி, ஞாயிறு கமல் தொகுத்து வழங்கும் காட்சியை  பார்ப்பதற்கென தனி ரசிகர் கூட்டமே காத்திருக்கும்.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பிராந்திய மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, மக்களின் எதிர்பார்ப்போடு தொடங்கி தற்போது 75 நாட்களைக்  கடந்துள்ளது பிக்பாஸ் சீசன் 7. 

இதன் ஆரம்பத்தில், 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் ஒருவர் தான் நடிகை மாயா. இவர் ஒரு மேடை நாடக நடிகர். அத்துடன் மேடை நாடகங்களில் நடிப்பதில் அதிகம் ஆர்வம் கொண்டவர். 


மேலும், மாயா ஒரு சில படங்களில் நடித்து இருந்தாலும் இவரை ரசிகர்கள் மத்தியில் பிரபல படுத்திய படம் என்றால் அது கண்டிப்பாக கமல் நடித்த விக்ரம் திரைப்படம் தான்.

குறித்த படத்தில் சின்னதாக ரோலில் நடித்திருந்தாலும் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன்வசம் ஈர்த்துள்ளார் மாயா. மேலும், லியோ படத்திலும் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் சக போட்டியாளர்கள் முன்னிலையில் நான் ஏன் இதுவரையில் அப்படியெல்லாம் செய்தேன் என்பதற்கு விளக்கம் கொடுத்துள்ளார். குறித்த வீடியோ தற்போது பெரிதும் பேசுபொருளாகியுள்ளது.

அதன்படி அவர் கூறுகையில், நான் ஒரு சீக்ரெட் சொல்லுறன். ஒரு நாள் நிக்சனும் ஐஷு வும் வந்து ஏன் இப்படி பண்ணுறீங்க.. இப்படி பண்ணினா தப்பா நினைப்பாங்க.. என சொல்லி இருந்தாங்க... எனக்கு அன்னைக்கு ரொம்ப ஸ்பெஷல் நாள்.ஆனாலும் நான் அதுக்கு பதில் சொன்னன்.


ஆனாலும் அந்த நாள் எனக்கு ரொம்ப முக்கியமா இருந்துச்சு.. ஏன்னா யாருக்குமே என்ன பத்தி புரியல.. ஆனா அந்த டைம்ல அவங்களுக்கு மட்டும் புரிஞ்சது அது தான் எனக்கு ரொம்ப சந்தோசமா இருந்துச்சு.

அப்போ நான், பூர்ணிமா, விஷ்ணு, கூல் சுரேஷ் எல்லாம் இருந்து பிளான் பண்ணுவம், இன்டைக்கு இந்த நாள்ல மக்களுக்கு எப்படி ஜாலியா கொண்டு போற, அவங்கள எப்படி என்டர்டைமென்ட் பண்ணுற என்டு தான் ஜோசிப்பம்.. கமல் சார் திட்டுறத எல்லாம் கண்டுக்கவே மாட்டன். மக்களுக்கு என்டர்டைமென்ட் பண்ணனும் அத நான் இப்ப மட்டும் ஜாலியா பண்ணிட்டு வாறன். எத பத்தியும் கவலை பட மாட்டன். இடையில யாரையும் கஷ்டப்படுத்தி இருந்தா மன்னிச்சிடுங்க .. எல்லாரையும் எனக்கு ரொம்ப பிடிக்கும் என சொல்லி இருந்தார்.

எனவே, இவ்வாறு பிக் பாஸ் வீட்டில் இதுவரையில் தவறாக சித்தரிக்கப்பட்ட மாயா, பூர்ணிமா இருவரும் தமது ஆட்டத்தை மாற்றி மக்கள் மத்தியில் இடத்தை பிடித்து வருகின்றனர். இறுதியில் யார் வின் பண்ணுவார் என பொறுத்து இருந்து பார்ப்போம்...



Advertisement

Advertisement