• Oct 06 2024

பாட்டிக்கு முத்து கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட் இதுதான்.. கே.ஆர்.விஜயா, வடிவுக்கரசி ஏமாற்று வேலையா?

Sivalingam / 3 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ சீரியலில் பாட்டிக்கு அவருக்கு பிடித்த கிப்ட் கொடுத்து அவர் கொடுக்க இருக்கும் ஸ்பெஷல் கிப்ட்டை வாங்க அனைவரும் முயற்சித்து வரும் நிலையில் முத்து கொடுத்த ஸ்பெஷல் கிப்ட் குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது.

முன்னதாக இந்த சீரியலில் மனோஜ் என்ற கேரக்டரில் நடிக்கும் ஸ்ரீதேவா, கேஆர் விஜயா மற்றும் வடிவுக்கரசி ஆகிய இருவரும் ’சிறகடிக்க ஆசை’ குழுவினருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவு செய்திருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த புகைப்படத்தின் மூலம் இந்த இருவரையும் முத்து தான் வீட்டிற்கு அழைத்து வந்ததாகவும் பாட்டிக்கு இந்த இருவரையும் பிடிக்கும் என்பதால் அவர் கொடுக்கும் கிப்டாக இருவரையும் அழைத்து வந்து, பாட்டியிடம் இருந்து அந்த ஸ்பெஷல் கிப்ட்டை வாங்கி விட்டதாகவும் கூறப்பட்டது.



ஆனால் தற்போது வந்திருக்கும் தகவலின் படி ’சிறகடிக்க ஆசை’ சீரியல் படப்பிடிப்பு நடக்கும் இடத்தின் அருகில் தான் கேஆர் விஜயா மற்றும் வடிவுக்கரசி நடிக்கும் படப்பிடிப்பு நடந்ததாகவும் அப்போது தற்செயலாக இருவரும் ’சிறகடிக்க ஆசை’ குழுவினர்களை சந்தித்து சில நிமிடங்கள் பேசி குரூப் புகைப்படம் எடுத்தது கொண்டதாகவும் தெரிகிறது. மற்றபடி கேஆர் விஜயா, வடிவுக்கரசி ஆகிய இருவரும் ’சிறகடிக்க ஆசை’ சீரியலில் நடிக்கவில்லை என்றும் அவர்களுடைய காட்சியும் இந்த சீரியலில் இல்லை என்றும் கூறப்படுகிறது.

அப்படி என்றால் முத்து, பாட்டிக்கு என்ன கிப்ட் கொடுத்தார் என்று கூறும் போது பாட்டியின் சிறுவயது தோழிகளை அவர் தேடி கண்டுபிடித்து அழைத்து வந்து அவர் முன் நிறுத்தியது தான் அவர் கொடுத்த கிப்ட் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியான வீடியோவில் பாட்டியுடன் அவரது இரண்டு தோழிகள் அருகருகே உட்கார்ந்து இருக்கும் காட்சி இருப்பதை அடுத்து இந்த தகவல் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இன்னும் ஓரிரு நாளில் இந்த தகவல் உண்மையா? என்பதை நாம் எபிசோடில் பார்த்து தெரிந்து கொள்வோம்.

Advertisement

Advertisement