• Dec 04 2023

பிக்பாஸ் வீட்டில் எல்லை மீறும் மாயா - பூர்ணிமா? தட்டிக் கேட்க பின்வாங்கும் ஆண்டவர்

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டுள்ளது. இதில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களுள் மாயா மற்றும் பூர்ணிமா ஆகிய இரண்டு போட்டியாளர்களும் பரபரப்பாக பேசப்படும் நபர்களாக மாறிவிட்டனர்.

ஏனென்றால், பிக் பாஸ் வீட்டில் அடிக்கடி ரூல்ஸ் மீறும் நபர்களாக இவர்கள் உள்ளதோடு, அடுத்தவர்களை நொண்டிப் பார்ப்பதில் கை தேர்ந்தவர்களாக காணப்படுகின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் கமலும், இவர்கள் செய்யும் குறிப்பாக மாயா செய்யும் தவறுகளை தட்டிக் கேட்பதே இல்லை என்ற குற்றசாட்டு தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றது.


இந்த நிலையில், தற்போது வெளியான வீடியோ ஒன்றில் மாயாவும் பூர்ணிமாவும் தங்களுடைய மைக்கை கழட்டி விட்டு பேசுகின்றனர்.

இவ்வாறு இருவரும் அடிக்கடி எல்லை மீறி செயற்படுவது ரசிகர்களை அதிருப்தி செய்துள்ளது. இவர்களின் செயற்பாட்டை சில சமயங்களில் கேப்டன் தினேஷ் கூட கண்டு கொள்வதில்லை. இது ஏன் என்ற கேள்வியும் எழுகின்றது.

அதேவேளை, நிக்சன் செய்த தவறுகளை சுட்டிக் காட்டி, குறும்படம் போட்டுக் காட்டும் கமல், மாயா கூட்டணியை மட்டும் விட்டு வைப்பதற்கான பின்னணி என்ன என்பதையும் ரசிகர்கள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.

எது எப்படியோ, தற்போது மாயா, பூர்ணிமா பிக் பாஸ் வீட்டில் போடப்பட்டுள்ள விதிகளை அதிகமாக மீறுகின்றனர். இதையாவது இனி வரும் நாட்களில் கமல் தட்டிக் கேட்பாரா என பொறுத்து இருந்து பார்ப்போம். 



Advertisement

Advertisement

Advertisement