• May 21 2024

செழியனைத் தேடி வீட்டுக்கு வந்த மாலினி- கணேஷால் அதிர்ச்சிக்குள்ளான பாக்கியா- குழப்பத்தில் இருக்கும் செழியன்- Baakiyalakshmi Serial

stella / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

மாலினி வீட்டுக்கு இரவு செல்லமுடியாததால் செழியன் அதை யோசிச்சுக் கொண்டே துாங்காமல் இருக்கின்றார். அப்போது ஜெனி எழுந்து என்னாச்சு என்று கேட்க, குழந்தையைப் பார்க்க முழித்து இருப்பதாகச் சொல்கின்றார்.தொடர்ந்து விடிந்ததும் கணேஷ் பாக்கியாவின் வீட்டு வாசலில் வந்து நிற்கின்றார்.


இந்த நேரம் அமிர்தா, வாசலில் கோலம் போடுவதற்காக வருகின்றார். அமிர்தா தண்ணீர் தெளித்து கோலம் போடும்போது அமிர்தாவின் கழுத்தில் தாலி தொங்குவதைப் பார்த்து அதிர்ச்சியடைகின்றார். இவ்வாறு அவர் பார்த்துக் கொண்டிருக்கும் போது பாக்கியா வருகின்றார். வாக்கிங் போக வந்த பாக்கியா கோலம் எதுக்காக பெரிதாகப் போடுறாய் என்று கேட்கின்றார்.

பின்னர் வாசலில் நின்று யாரோ அமிர்தாவை பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்த பாக்கியா அமிர்தாவை உள்ளே அனுப்பி விட்டு பின்னர்,யாரென்று போய் பார்க்கின்றார். அப்போது கணேஷ் மறைந்து கொள்கின்றார். தொடர்ந்து எல்லோரும் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது ஜெனியை விழுந்து விழுந்து கவனிக்கின்றார் செழியன்.


அந்த நேரம் வீட்டிற்கு மாலினி வருகின்றார். மாலினியைப் பார்த்ததும் செழியன் அதிர்ச்சியடைவதோடு பாக்கியாவைப் பார்த்து முழிக்கின்றார். மேலும் மாலினி எல்லோரிடமும் போய் பேசுகின்றார். ஜெனியின் போன் நம்பரை வாங்குவதோடு ஜெனியின் குழந்தையைப் பார்க்க வந்ததாகவும் சொல்கின்றார்.


மாலினி வந்ததில் இருந்து செழியன் எதுக்கு பயப்பிடுகின்றான் என்பதை பாக்கியா கவனிக்கின்றார். பின்னர் வீட்டுக்குச் செல்லும் ஜெனி நீங்க என்னைப் பார்க்கல என்றால் இனிமேல் அடிக்கடி வீட்டுக்கு வருவேன் என்று சொல்கின்றார். இதனால் செழியன் அதிர்ச்சியடைகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement