• May 19 2024

தொழிலாளிகளுக்காக கோதை எடுத்த முடிவு- கிண்டலடித்து தமிழை வெறுப்பேத்திய அர்ஜுன்- குழப்பத்தில் ராகினி-Thamizhum Saraswathiyum Serial

stella / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

அர்ஜுன் தமிழுக்கு லோன் கிடைக்காததால் அதை வைத்து நக்கலடிக்கின்றார். வேணும் என்றால் நான் பணம் கொடுக்கிறேன் வாங்கிக்கோங்க என்று சொல்ல, நமச்சி யார் பணத்தை யார் கொடுக்கிறது உங்களுக்கு திமிராப் போச்சு தானே என்று திட்டுகின்றார். இருந்தாலும் அர்ஜுன் நக்கலாகப் பேசிக் கொண்டே போகின்றார்.


அப்போது தமிழ் என் குடும்பமும் எங்க அம்மாவும் கூட இருக்கிறாங்க, அம்மா சொன்ன மாதிரி நான் இதிலிருந்து திரும்பி வருவேன். கம்பெனியை சீக்கிரமாவே ஆரம்பிப்பேன் என்று அர்ஜுனுக்கு சவால் விட்டிட்டு போகின்றார். தொடர்ந்து வீட்டில் எல்லோரும் பேசிட்டு இருக்கும் போது தமிழும் நமச்சியும் வருகின்றனர்.

அப்போது தமிழ் தொழிலாளிகளுக்கு சம்பளம் கொடுக்கனும்.அது தான் என்ன பண்ணுறது என்று தெரில என்று சொல்ல, அந்த நேரம் கோதை எங்களுடைய முன்னேற்றத்திற்கு அவங்க தான் காரணம், அவங்க சம்பளத்தை நாங்க கொடுத்தே ஆகனும் என்று எல்லா நகைகளையும் கழட்டிக் கொடுக்கின்றார். 


தாலியையும மஞ்சள் கயிற்றில் கோர்த்து விட்டு தாலிச் செயினைக் கொடுக்கப் போகின்றனர். அப்போது தமிழ் கோதையின் தாலியை கழட்ட வேண்டாம் என்று சொல்கின்றார். பின்னர் அந்த நகைகளை அடைவு வைதது தொழிலாளிகளுக்கு சம்பளம் அனுப்பி விடுகின்றார். தொடர்ந்து தொழிலாளிகளிடம் இங்க வேலை ஆரம்பிக்க கொஞ்ச நாள் ஆகும் அதுவரை நீங்க வேறு எங்கையாவது வேலை பாருங்க என்று சொல்கின்றார்.

ஆனால் தொழிலாளர்கள் அதெல்லாம் முடியாது,நாங்க உங்களுக்கு உறுதுணையாகத் தான் இருப்போம். எங்களுடைய சம்பளப் பணத்தை கூட திரும்ப எடுத்துக்கோங்க, கம்பெனி சரியானவுடன் கொடுத்திடுங்க என்று சொல்ல தமிழ் அதெல்லாம் வேணாம் நீங்க எங்க கூட இருந்தாலே போதும் என்கின்றார்.


மறுபுறம் ராகினி கோயிலுக்கு போகின்றார். அங்கு கோதையும் தன்னுடைய மருமகள்களுடன் போகின்றார். அப்போது இரண்டு பெண்கள் வந்து கோதை செய்த எதவிக்கு நன்றி தெரிவிக்கின்றனர். மேலும் எப்போதும் மகாலக்ஷ்மி மாதிரி நிறைய நகை போட்டிருப்பீங்க.ஆனால் அப்போ உங்க மருமகள்கள் கூட மஞ்சள் கயிறு போட்டிருக்கிறாங்க என்று நினைக்கும் போது கவலையாக இருக்கு என்று சொல்வதை ராகினி கேட்கின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement