• May 19 2024

ஹேமாவைப் போல கேள்வி மேல கேள்வி கேட்கும் லட்சுமி- அடிக்க கை ஓங்கிய கண்ணம்மா- பாரதியை திட்டிய சௌந்தர்யா

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் சௌந்தர்யா ஹேமாவை நினைத்து தன்னுடைய கணவரிடம் வருத்தப்பட்டு கொண்டு இருக்கிறார்.

மேலும் பாரதிக்கு திரும்பவும் போன் போட போன் சுவிட்ச் ஆப் என வருவதை பார்த்து எங்க தான் போய் தொலைஞ்சான்னு தெரியல என பாரதி மீது கோபமாக இருக்கிறார். 10 வருடத்துக்கு முன்னாடி பார்த்த சௌந்தர்யாவை பார்ப்பான் அவன் வாயாலேயே நீ என்னுடைய பொண்ணு என்று சொல்ல வைக்கிறேன் என்ன சௌந்தர்யா ஆவேசமாக பேச வேண்டும் என்ற சொல்ல அஞ்சலி நீங்க செய்யறது செய்யுங்க நாங்க உங்களுக்கு சப்போர்ட்டா இருப்போம் என கூறுகின்றனர்.


அடுத்து லட்சுமி கண்ணம்மாவிடம் ஏன் ஹேமாவிடம் உண்மையை சொல்லக்கூடாது என்று நினைக்கிறீர்கள் எதற்காக நீயும் அப்பாவும் பிரிஞ்சீங்க உங்களுக்குள்ள என்ன பிரச்சனை? அப்படியே நீங்க ரெண்டு பேரும் சண்டை போட்டு பிரிஞ்சாலும் அப்பா ஏன் எங்கள பொண்ணா ஏத்துக்க மாட்டாரு ஏன் பேச மாட்டார்? என கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டே செல்ல பதில் சொல்ல முடியாத கண்ணம்மா லட்சுமியை அடிக்க கை ஓங்குகிறார். இப்படி எல்லோரும் மாத்தி மாத்தி கேள்வி மேல கேள்வி கேட்டா நான் எப்படி தான் சமாளிக்கிறது என கண்கலங்கி அழுகிறார்.

டிஎன்ஏ டெஸ்ட் கிடைத்ததும் பாரதி சௌந்தர்யாவுக்கு போன் போட சௌந்தர்யா அவனிடம் கோபமாக பேசி நடந்த விஷயங்கள் அனைத்தையும் சொல்கிறார். ஹேமா இவ்வளவு பிரச்சனைக்கு அப்புறம் தன்னுடைய அப்பா யாருன்னு கேக்குறா நாங்க என்ன பதில் சொல்றது என சொல்ல பதறும் பாரதி இன்னும் நான்கு மணி நேரத்தில் அங்க இருப்பேன். நீங்க எல்லோரும்  எந்த ஹாஸ்பிடலில் இருக்கிறீங்க என்று கேட்கிறார். நீ எதுக்காக டெல்லி போன எதுக்காக போனை சுவிட்ச் ஆப் பண்ணி வச்சிருந்த என சௌந்தர்யா கேட்க அது எதுவும் என்கிட்ட கேட்காதீங்க ஏன் சூழ்நிலை அப்படி நான் எல்லாத்துக்கும் நேர்ல வந்து பதில் சொல்றேன்.


மேலும் என் வாழ்க்கைல நடந்துகிட்டு இருந்த எல்லா பிரச்சனைக்கும் தீர்வு கிடைச்சிடுச்சு என சொல்லி போனை வைக்கிறார் பாரதி. அதன் பிறகு அவர் டெல்லியில் இருந்து வேக வேகமாக சென்னைக்கு கிளம்புகிறார். இத்துடன் இன்றைய  எபிசோட் முடிவடைகிறது.

Advertisement

Advertisement