• May 07 2024

'கே.எஸ் ரவிக்குமாரும் ஒரு நடிகர்' - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல திரைப்பட விமர்சகர்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இயக்கிய முதல் படத்தின் மூலமே வெற்றி இயக்குநராக அறியப்பட்டவர் தான் நெல்சன். இவர் இயக்கத்தில் இறுதியாக வெளியாகிய பீஸ்ட் திரைப்படத்திற்கும் ரசிகர் மத்தியிலே அதிக வரவேற்புக் காணப்பட்டது. இருப்பினும் அப்படம் தோல்வியையே சந்தித்தது.

இதனைத் தொடர்ந்து ரஜினி நடிக்கும் 169வது படத்தை இயக்கப் போவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் இம்மாதம் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் பீஸ்ட் பட தோல்வியால் ரஜினியின் படத்தை இவர் இயக்குவது குறித்து ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

அதேநேரத்தில் ரஜினிகாந்த், ஃபுல் ஸ்க்ரிப்ட்டையும் கேட்டதாகவும் இதனால் நெல்சன் அப்செட்டில் இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக தலைவர் 169 படத்திற்கு இயக்குநர் மட்டும்தான் நெல்சன், ஸ்க்ரீன் ப்ளே கேஎஸ் ரவிக்குமார் என தகவல் பரவி வந்தது.

ரஜினிகாந்த் கேஎஸ் ரவிக்குமார் கூட்டணியில் வெளியான படங்கள் செம ஹிட்டானதால் அவருடைய உதவியை ரஜினிகாந்த் கேட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் அதெல்லாம் வெறும் வதந்தி என்றும் கேஎஸ் ரவிக்குமாரும் ஒரு நடிகர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதனை திரைப்பட விமர்சகரான பிரசாந்த் ரங்கஸ்வாமியும் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் தலைவர் 169 படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது என்றும் கூறியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement