• May 22 2024

முதன் முறையாக தமிழ் வீட்டுக்குச் சென்று சாப்பிட்ட கார்த்திக்- சண்டை போட்ட ராகினியை அடக்கிய கோதை- மகிழச்சியில் சரஸ்வதி

stella / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் நடைபெறவுள்ளது என்று பார்ப்போம்.

ராகினி இந்த வீட்டில நடக்கிற பங்சனுக்கு தமிழும் சரஸ்வதியும் வரவே கூடாது என்று அடம் பிடிக்கின்றார்.அப்போது சந்தரகலா இங்க பங்சனை வைத்தால் தான் பிரச்சினை எங்க வீட்டில வைக்க வேண்டியது தான். எங்க வீட்டில யார் வந்தாலும் உங்களுக்கு பிரச்சினை இல்ல தானே என்று சொல்கின்றார்.


மேலும் வசுவிடம் தமிழும் சரஸ்வதியும் இங்க வராவிட்டால் என்ன எல்லோரும் ஒன்றாக ஒரு இடத்தில் இருந்தாலே போதும் தானே ராகினி அடம் பிடிக்கிறதை பார்த்தால் பங்சனை நடக்கவிடாமல் பண்ணிடுவா, அதனால தான் நம்ம வீட்டில வைக்கலாம் என்று சொன்னேன் எனச் சொல்கின்றார்.

தொடர்ந்து கார்த்திக்கை கோதை தமிழ் வீட்டுக்குச் சென்று சென்று இன்விரேஷன் கொடுத்திட்டு வரும் படி சொல்ல முதலில் மறுப்புத் தெரிவித்த கார்த்திக் பின்னர் இன்விரேஷனைக் கொண்டு தமிழ் வீட்டுக்குப் போகின்றார்.ஆனாலும் உள்ளே போக முடியாமல் வெளியே நிற்க நமச்சியும் சரஸ்வதியும் திருடன் என்று அடிக்கப் போகின்றனர்.

பின்னர் கார்த்திக் என்றவுடன் சந்தோஷமாக உள்ளுக்குள்ளே அழைக்கின்றனர். பின்னர் கார்த்திக் இன்விரேஷனைக் கொடுக்க எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர். பின்னர் சரஸ்வதி கட்டாயப்படுத்தி கார்த்திக்கை சாப்பிட வைக்க கார்த்திக்கும் சாப்பிடுகின்றார். பின்னர் வீட்டுக்கு காரத்தி வந்ததும் எல்லோரும் விசாரிக்கின்றனர்.


அப்போது ராகினி திட்டுகின்றார் எனக்கு இந்த வீட்டில என்ன தான் மரியாதை இருக்கு என்று சொல்ல கார்த்திக் அவங்க வருவாங்களோ வரமாட்டாங்களோ தெரியாது. அதுக்குள்ள நீயே ஏன் முடிவெடுக்கிற என்று கேட்கின்றார். மேலும் கோதையும் இது வசுவோட குழந்தை யார் வரனும் வரக்கூடாது என்று அவ தான் முடிவு பண்ணணும் ஒரு நல்ல காரியத்தை தடுக்கப்பார்க்காத என்று சொல்ல ராகினி கோபித்துக் கொண்டு செல்கின்றார்.  தொடர்ந்து கார்த்திக் தமிழ் வீட்டுக்கு போனதற்கு கோதை தான் காரணம் என வசு சரஸ்வதியிடம் சொல்கின்றார்.இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement