• Sep 29 2024

ராஷி கண்ணா மீது கார்த்திக்கு என்ன கோபம்? நாயகி கேரக்டரில் இருந்து நீக்கியதால் பரபரப்பு..!

Sivalingam / 3 months ago

Advertisement

Listen News!


கார்த்தி நடித்த ’சர்தார்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் முதல் பாகத்தில் நாயகி ஆக நடித்த ராஷி கண்ணா இரண்டாம் பாகத்தில் இல்லை என்றும் அவருக்கு பதிலாக வேறு நடிகை நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

கார்த்தி, ராஷி கண்ணா உள்பட பலர் நடிப்பில் உருவான ’சர்தார்’ திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு தீபாவளி தினத்தில் வெளியானது என்பதும் இந்த படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக இருப்பதாக கூறப்படும் நிலையில் இரண்டாம் பாகத்தின் திரைக்கதை எழுதும் பணியையும் பி.எஸ். மித்ரன் முடித்து விட்டதாகவும் கூறப்பட்டது.


இந்த நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில் முதல் பாகத்தில் நடித்த ராஷி கண்ணா இரண்டாம் பாகத்திலும் நாயகியாக நடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் அவர் இந்த படத்தில் நடிக்கவில்லை என்றும் அவருக்கு பதிலாக நடிகை ஆஷிகா ரகுநாத் இடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

அதர்வா நடித்த ’பட்டத்து அரசர்’ உள்பட ஒரு சில தமிழ் படங்களில் ஆஷிகா ரகுநாத் நடித்துள்ளார் என்ற நிலையில் தற்போது அவர் ‘சர்தார் 2’ படத்திலும் நடிக்கவுள்ளார்.


Advertisement

Advertisement