• Sep 20 2024

தூக்கத்திலேயே போயிடனும் என்று தான் சொல்வார்- பிரதாப் போத்தனின் மறைவு குறித்து உருக்கமாகப் பேசிய கனிகா

stella / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகராக இருந்த பிரதாப் போத்தன் இன்றைய தினம் சென்னலையிலுள்ள தனது வீட்டில் உடல் நிலை சரி இல்லாத காரணத்தால் உயிரிழந்தார். இவருடைய மறைவிற்கு திரையுலகைச் செர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மலையாள நடிகர் பிருத்விராஜ், நடிகை குஷ்பு விஜய்சேதுபதி கமல் உள்ளிட்டோர் சமூக வலைத்தளங்களிலும் இயக்குநர் மணிரத்னம், பி.சி. ஸ்ரீராம் உள்ளிட்ட திரை ஆளுமைகள் நடிகர் பிரதாப் போத்தனின் வீட்டிற்கே சென்று நேரில் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி உள்ளனர்.

மலையாள திரையுலகின் சார்பாக நடிகை கனிகா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிகர் பிரதாப் போத்தன் மறைவு செய்தி அறிந்ததும் சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி உள்ளனர்.

ஃபைவ் ஸ்டார், ஆட்டோகிராஃப், எதிரி, வரலாறு, யாதும் ஊரே யாவரும் கேளீர், கோப்ரா உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்துள்ள நடிகை கனிகா நடிகர் பிரதாப் போத்தன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நிலையில், மரணம் பற்றி அவர் பேசும் போது, நிம்மதியா தூக்கத்திலேயே.. உயிர் போயிடணும்னு சொல்வார்.. அப்படியே இன்று மறைந்து விட்டார் என மிகவும் உருக்கமாக பேசி உள்ளார்.

இயக்குநர் மாது இயக்கத்தில் மம்மூட்டி நடிப்பில் இந்த ஆண்டு வெளியான சிபிஐ 5 தி பிரைன் படத்தில் நடிகர் பிரதாப்புக்கு மனைவியாக சூசன் ஜார்ஜ் எனும் கதாபாத்திரத்தில் நடிகை கனிகா நடித்திருப்பார் என்பதும் குறிப்பிடத்க்கது

பிற செய்திகள்

ஐ லவ் யூ டா அமீர்- ஒருவழியாக காதலுக்கு சம்மதம் தெரிவித்த பிக்பாஸ் பாவானி 

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement