• May 19 2024

கீர்த்தி சுரேஷ்க்கு என்ன ஆச்சு? ரத்தம் வழிந்த நிலையில் வெளியான புகைப்படம் -அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் ,தெலுங்கு, மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்பவர் கீர்த்தி சுரேஷ், இவர் 2002 களில் குழந்தை நட்ச்சத்திரமாக அறிமுகமாகி 2013இல் கீதாஞ்சலி என்ற மலையாள திரைப்படத்தில் கதாநாகியாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

விக்ரம் பிரபுவுடன் நடித்த இது என்ன மாயம் திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் என்றி ஆனார். தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ளார்.

குறிப்பாக,சிவகார்த்திகேயனுடன் ரெமோ, ரஜனி முருகன் போன்ற படங்கள், மற்றும் தளபதியுடன் பைரவா, சர்க்கார் போன்ற திரைப்படங்கள் இவருக்கு பட வாய்ப்புக்கள் குவிந்தன.

தனக்கான கதையம்சத்தை தேர்ந்தெடுத்து வரும் கீர்த்தி தற்போது சர்காரு வாரி பாட்டா படத்தில் மகேஷ் பாபாவுக்கு ஜோடியாகவும், சாணிக்காகிதம் படத்தில் மிகவும் வித்தியாசமான ரோலிலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகின்றார்.

இப்படத்தில் இயக்குனர் செல்வராகவன், கண்ணா ரவி, லிஸ்டில் ஆண்டனி, வினோத் உட்பட பலர் நடித்தனர்.இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் கீர்த்தி சுரேஷ் கன்னம் வீங்கி ரத்தம் வழியும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

மேலும் முகத்தில் ரத்தம் வழிந்த நிலையில் வெளியான புகைப்படம் பார்த்த அவரது ரசிகர்கள் ஷாக்கானார். ஆனால், இந்த ரத்தம் வழியும் கறை படிந்த முகம், ‘சாணி காயிதம்’ படத்திற்காக மேக்கப் போடப்பட்டதாக வீடியோ வெளியானதால், ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு அடைந்தனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement