• May 11 2024

கமல், விஜய், அஜித் மூன்று பேரையும் சேர்த்து கட்சி அமைக்கணும்- பரபரப்பை ஏற்படுத்திய கங்கை அமரன்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உள்ள இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் தான் இசையமைப்பாளர் கங்கை அமரன். இவர் இளையராஜாவின் சகோதரன் என்பதும் தெரிந்ததே. இவர் சமீபத்தில் ஓர் தனியார் யூடியூப் சேனலில் பேசிய விடயம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது இவர் அரசியலிலும் ஈடுபட்டு வருகின்றார். பாஜக கட்சியை சேர்ந்த இவர், தனது பேட்டிகளில் அரசியலை எப்போதுமே முன்வைத்து பேசியதோடு சில சர்ச்சைக்குரிய விடங்களையும் பேசி பரபரப்பை ஏற்படுத்தி விடுவார். அந்த வகையில் அவர் பேசியதாவது மக்கள் நீதி மய்யம் கட்சியை ஆரம்பித்து நடத்தி வரும் நடிகர் கமல்ஹாசன், விஜய் மக்கள் இயக்கத்திற்கு ஆதரவு அளித்து வரும் நடிகர் விஜய், அரசியல் ஆசையே வேண்டாம் என ஒதுங்கி இருக்கும் நடிகர் அஜித் ஆகிய மூன்று பேரையும் ஒன்றாக இணைந்து ஒரு கட்சியை ஆரம்பிக்க வேண்டும் என்றும், இவர்கள் மூவரும் ஒன்றாக ஆட்சி நடத்தினால் மக்கள் சந்தோஷமாக இருப்பார்கள் என்றும் கூறினார்.

அத்தோடு கமல், விஜய், அஜித் மட்டுமின்றி தற்போது சூர்யாவும் சமூக நலனுக்காக பல விஷயங்களை செய்து வருகிறார். அவரையும் அந்த கட்சியில் சேர்த்து விடுங்கள், நான்கு பேரும் சேர்ந்து மக்களுக்கு நல்லது பண்ணட்டும் என்றும் தன் இஷ்டத்துக்கு வேடிக்கையாக பேசியுள்ளார்.

கமல் முதல்வராக இருந்து செயல்படட்டும், விஜய் நிதியமைச்சராக இருக்கட்டும், கஜானாவில் காசு இல்லையென்றால், தனது சொந்த காசை போட்டாவது நல்ல திட்டங்களை செய்து விடுவார் என்று ஜாலியாக பேசிய கங்கை அமரன், தனக்கு அறநிலையத்துறையை மட்டும் கொடுத்துடுங்கப்பா என்றும் அந்த பேட்டியில் பேசியுள்ளார்.

மேலும், அவர் இப்படி நடந்தா நல்லா இருக்கும்னு நான் ஆசைதான் பட முடியும். என்ன செய்யணும், செய்யக் கூடாது என்பதை முடிவு செய்வது அவர்கள் கையில் தான் இருக்கிறது என்றும் கூறி அழகாக எஸ்கேப் ஆகி விட்டார். இவர் இவ்வாறு கொளுத்தி போட்ட விடயம் ரசிகர்களிடையே வைரலாக பேசி வருவதைக் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement