• May 12 2024

'கோப்ரா' படத்தின் பாடல் லிஸ்ட் வெளியீடு...எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விக்ரம். இவர் ஒரு படத்தில் நடிக்க வேண்டுமாயின் அந்தப் படத்திற்காக தனது உடலையும் வருத்திக் கொள்ளும் துணிச்சலான நடிகரும் ஆவார். இவ்வாறாக எந்த கதாபாத்திரத்தையும் துணிந்து ஏற்கும் இயல்பு கொண்டவர். தற்போது இவரது நடிப்பில் சியான் 60 என்னும் 'கோப்ரா' என்ற திரைப்படம் உருவாகி வருகின்றது.

அந்தவகையில் ஆர்.அஜய் ஞானமுத்து இயக்கத்திலும், எஸ்.எஸ் லலித் குமாரின் செல்வன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிப்பிலும் 'கோப்ரா' திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தில் கதாநாயகனான நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி செட்டி நடித்துள்ளார். மேலும் முக்கிய வேடத்தில் பிரபல இயக்குநரான கே.எஸ்.ரவிக்குமார் நடித்துள்ளார். அத்தோடு இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

அறிமுகப் படத்திலிருந்து தொடர்ந்து இதுவரை காலமும் விக்ரம் நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட் படமாக 'கோப்ரா' உருவாகியுள்ளது. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்புகளும் கடந்த மாதம் முடிவுற்றது. இந்நிறைவையொட்டி படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.

தற்போது இப்படத்துக்கான ரிலீஸ் வேலைகள் யாவும் மும்முரமாக நடந்து வரும் நிலையில் ஆகஸ்ட் மாதம் 11-ஆம் திகதி திரைப்படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு இந்தப் படத்தின் தமிழக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அதேபோல படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமையை யுனைடெட் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் நாளை 'கோப்ரா' படத்தின் ஆடியோ லான்ச் நடைபெறவுள்ள நிலையில் இன்று பாடல்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. மொத்தம் 5 பாடல்களைக் கொண்டதாக கோப்ரா ஆல்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் "தும்பி துள்ளல்…." என்ற பாடலை விவேக் ஜிதின் ராஜ் எழுத ஸ்ரேயா கோஷல், நகுல் அப் யங்கர் பாடியுள்ளனர். "அதீரா….." பாடலை பா.விஜய் எழுதியுள்ளார். இதனை வகு மஸன் பாடியிருக்கிறார். தாமரை எழுதியுள்ள "உயிர் உருகுதே…." பாடலை ஏ.ஆர்.ரகுமான் பாடியுள்ளார். இந்த மூன்று பாடல்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன.

இதைத் தவிர்த்து "தரங்கிணி…" எனத் தொடங்கும் பாடலை தாமரை எழுத சர்தக் கல்யாணி பாடியுள்ளார். பா.விஜய் எழுதியுள்ள "ஏலே இளம்சிங்கமே…" என்ற பாடலை ரக்சிதா சுரேஷ் பாடியுள்ளார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக விக்ரமுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகி இருந்தன. இதனால் நாளை நடைபெற உள்ள பாடல் வெளியீட்டு விழாவில் பங்கேற்பார் என்று தற்போது தகவல்கள் வெளியானதால் ரசிகர்கள் மத்தியில் பெரியளவிலான எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement