• Jul 04 2024

தன்னுடைய மகனின் முகம் தெரியும் வகையில் போட்டோ ஒன்றை வெளியிட்ட காஜல் அகர்வால்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் ,தெலுங்கு ஆகிய மொழிகளில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து பிரபல்யமானவர் தான் நடிகை காஜல் அகர்வால். இவர் தமிழில் பரத் நடிப்பில் வெளியான பழனி திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகினார். இதனைத் தொடர்ந்து தமிழில் படவாய்ப்புகள் கிடைக்காமையால் தெலுங்கு சினிமாவில் கால் பதித்தார்.

அந்த வகையில் தெலுங்கில் ராஜ மௌலி இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் வெளியான மாவீரன் திரைப்படத்தில் நடித்து பிரபல்யமானதோடு முன்னணி நடிகையாக வலம் வந்தார். தமிழிலும் சிறந்த நடிகையாக அறியப்பட்டார்.

இவர் கௌதம் கிச்சிலு என்ற தொழிலதிபரைக் காதலித்து பெற்றொர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகும் சில படங்களில் கமிட்டாகி நடித்து வந்த இவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது.

மகனுக்கு நீல் கிச்லு என பெயர் சூட்டி இருக்கின்றனர். குழந்தை பிறந்ததை அறிவித்தாலும் போட்டோவை வெளியிடாமல் இருந்தனர். காஜல் வெளியிட்ட போட்டோவில் குழந்தையின் முகத்தை மறைந்திருந்தார்.

இந்நிலையில் தற்போது காஜல் தனது மகன் முகம் தெரியும் வகையில் போட்டோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அது தற்போது வைரல் ஆகி வருவருவதைக் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement