• Jul 07 2024

சூர்யா வீட்டில் வெடித்த பஞ்சாயத்து..? ஹோட்டலில் ரூமெடுத்து தங்கும் ஜோதிகா... ஷாக் தகவல்

Aathira / 2 days ago

Advertisement

Listen News!

மும்பையில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். இவர் வாலி படத்தின் மூலம் தனது திரையுலக கேரியரை ஆரம்பித்துள்ளார். அதன்பின் ஜோதிகா நடிப்பில் பல வெற்றி படங்கள் வெளியானது.

இதைத் தொடர்ந்து 'பூவெல்லாம் கேட்டுப்பார்' என்ற படத்தில் முதன் முதலாக கதாநாயகியாக நடித்தார். இதில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் தான் சூர்யா. அதன் பின்பு படங்களில் இணைந்து நடித்த சூர்யாவுக்கும் ஜோதிகாவுக்கும் இடையில் காதல் மலர, இரு வீட்டார்கள் சம்மதிக்கும் வரையில் பொறுத்து இருந்து திருமணம் செய்து கொண்டார்கள்.

திருமணத்திற்கு பிறகு திரையுலக வாழ்வில் இருந்து விலகி இருந்த ஜோதிகா, தனது குடும்பம் பிள்ளைகள் என அவர்கள் மீது தனது முழு கவனத்தை செலுத்தி வந்தார். எனினும் பிள்ளைகள் சற்று வளர்ந்ததும்  36 வயதினிலே படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்கு ரீ என்ட்ரி கொடுத்தார். அதன்பின் தற்போது சினிமாவில் மீண்டும் கலக்கி வருகின்றார்.

இறுதியாக ஸ்ரீகாந்த் என்ற ஹிந்தி படத்தில் நடித்திருந்தார்  ஜோதிகா. அந்தப் படம் நல்ல வரவேற்பு பெற்றது. அதேபோல மாதவனுடனும் சைத்தான் என்ற ஹாரர் படத்தில் நடித்திருந்தார். இதுவும் கிட்டத்தட்ட 100 கோடி வரை வசூலித்து இருந்ததாக தகவல்கள் வெளியாக இருந்தன.


இந்த நிலையில் தற்போது ஜோதிகா - சூர்யா தொடர்பில் புதிய தகவல் ஒன்று கசிந்துள்ளது.

அதாவது சென்னையில் சூர்யா பிரம்மாண்டமாக வீடு ஒன்றை கட்டி, அதில் சிவகுமார், சூர்யா, கார்த்தி உள்ளிட்டோர் கூட்டு குடும்பமாக வாழ்வதற்கு திட்டம் போட்டு இருந்தார். ஆனாலும் அந்த சமயத்தில் தான் ஜோதிகாவும் சூர்யாவும் மும்பைக்கு சென்று விட்டதாக கூறப்படுகின்றது.

அவ்வப்போது மும்பையில் இருந்து சென்னை வரும் ஜோதிகா, அந்த வீட்டில் கூட தங்காமல் ஹோட்டலில் ரூம் புக் பண்ணி தங்குவதாக திரையுலக வட்டாரங்களில் பேச்சுக்கள் எழுந்துள்ளன. இதனால் சூர்யா வீட்டுக்கும் ஜோதிகாவுக்கு இன்னும் பஞ்சாயத்து முடியவில்லை என கிசுகிசுக்கப்படுகிறது. இது சூர்யா - ஜோதிகா ரசிகர்களுக்கு இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

எனினும் இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பது பற்றி இதுவரை உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement