• Mar 12 2026

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஜோவிகா போட்ட முதல் பதிவு,- ரொம்ப எமோஷனலாக இருக்கிறாங்களே...

stella / 2 years ago

Advertisement

Listen News!

தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனும், முதல் வாரத்தில் இருந்தே சூடுபிடிக்க தொடங்கி தற்போது 60 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.  இரண்டு வீடுகளுடன் நடத்தப்படும் இந்நிகழ்ச்சியில் இதுவரை 7 வைல்டு கார்டு போட்டியாளர்கள் பங்கெடுத்துள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் வார வாரம் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த வார நாமினேஷனில் சரவண விக்ரம், விசித்ரா, பூர்ணிமா, தினேஷ், அர்ச்சனா, கூல் சுரேஷ், ஜோவிகா, மணி ஆகியோர் சிக்கி இருந்தனர்.


 இதில் சரவண விக்ரம் தான் இந்த வாரம் எலிமினேட் ஆவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் டுவிஸ்ட் வைத்த பிக்பாஸ் ஜோவிகாவை எலிமினேட் செய்து அதிர்ச்சி கொடுத்துள்ளார். இது ஒரு புறம் இருக்க ஜோவிதா சீக்ரெட் ரூமில் இருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகி வந்தது.


இந்த நிலையில் வனிதாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜோவிகா தன்னுடைய அம்மாவைப் பற்றி பெருமையாகப் பேசிய பதிவினைப் போட்டுள்ளார். இதன் மூலம் ஜோவிகா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது உறுதியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement