• Apr 26 2024

கல்யாண வீட்டில் கதிருடன் சண்டை போட்ட ஜீவா- மீனா கேட்ட ஒற்றைக் கேள்வி- மகிழ்ச்சியில் ஜனார்த்தனன்

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடந்தது என்று பார்ப்போம்.மீனாவின் அப்பா மற்றும் தனது மச்சானுடன் இணைந்து ஜீவா குடித்துக் கொண்டிருக்கின்றார்.அப்போது மீனாவின் அப்பா மூர்த்தி சொன்னதை வைத்து ஜீவாவை ஏற்றி விடுகின்றார்.

பின்னர் கதிர் வந்து ஜீவா குடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து கதிர் கடிக்க வேணாம் என்று சொல்ல நீயாரடா என்னை குடிக்க வேணாம் என்று சொல்ல என்னைப் பற்றி எதுவும் கேட்கக் கூடாது என சத்தம் போட மீனாவின் அப்பா சமாதானப்படுத்தி கதிரை உள்ளே அனுப்பி வைதது விட்டு மாப்பிள்ளை எங்க பக்கம் வந்திட்டாரு என்று மனதுக்குள் குஷியாக இருக்கின்றார்.


தொடர்ந்து விடிந்ததும் கதிர் கண்ணன் மூர்த்தி மூவரும் ஒரே மாதிரி சேர் போட்டிட்டு இருப்பதை பார்த்த மீனாவின் அப்பா எல்லோருக்கும் அளவா இருக்குதா. எடுக்கும் போது பயந்திட்டு எடுத்தேன் ஆனால் எல்லாருக்குமே அளவாத்தான் இருக்கு என்று சொல்ல எல்லோரம் ஜீவா எங்கு என்று கேட்க ஜீவாவும் மீனாவும் மண்டபத்துக்கு போய்விட்டதாக சொல்கின்றார்.


பின்னர் மட்டபத்துக்கு வந்த ஜீவா கடுமையாக வேலை செய்திட்டு இருப்பதைப் பார்த்த மீனா உங்க வீட்டில மொய் வச்சிருவாங்க தனே. நாம ஏதும் தனியாப் பண்ணனுமா என்று கேட்க ஜீவா இதெல்லாம் பயப்பிடாத எங்க வீட்டில பார்த்துப்பாங்க. மொய் எல்லாம் நிறைய தான் வைப்பாங்க என்று சமாதானம் செய்து வைக்கிறார். பின்னர் கதிர் ஜீவாவிடம் ஏதாவது வேலை இருக்கா என்று கேட்க ஜீவா எதுவும் இல்லை என்று சொல்லி கிளம்பி விடுகின்றார். அடுத்து நாங்க 4 பேரும் ஒன்றாக நின்று போட்டோ எடுப்பமா என்று கண்ணன் கேட்க ஜீவா யோசிக்கின்றார். இத்துடன் இந்த எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement

Advertisement