விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் தற்பொழுது அண்ணன் தம்பிகளுக்கிடையில் விரிசல் ஏற்பட்டு விட்டது. இதனால் அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்ற ஆர்வத்தில் ரசிகர்கள் இருக்கின்றனர்.
குறிப்பாக ஜீவா அண்ணனுக்கு எதிராக பேசியதோடு மாமனார் வீட்டிலேயே தங்கி விட்டார்.முல்லை வளைகாப்புக்கும் வரமாட்டேன் என்று சொல்லி விட்டார். இதனால் எப்போது மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் ஒன்று சேரும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர்.
இந்த நிலையில் முல்லையில் வளைகாப்பு நடைபெறவுள்ளதால் வளைகாப்புக்கு ஜீவாவும் செல்வாரா என்ற எதிர்பார்ப்பானது ரசிகர்களிடையே அதிகமாக இருந்த நிலையில் தற்போது ஒரு ப்ரமோ வெளியாகி உள்ளது.
அதாவது மீண்டும் இந்த குடும்பம் இப்படி ஒன்று சேர்ந்திட வேண்டும் என தனம் கடவுளிடம் கோரிக்கை வைக்க ஜீவா மனைவி பிள்ளைகளுடன் வளைகாப்பிற்கு வருகின்றார்.
பிறகு எல்லோரும் சேர்ந்து சடங்குகளை செய்து ஆட்டம் பாட்டம் என கொண்டாட ஜீவா அங்கு தன்னுடைய பரிசாக பவுன் நெக்லஸை கெத்தாக பரிசளிக்கின்றார்.
இறுதியில் இந்த குடும்பம் ஒன்று சேருமா என ரசிகர்கள் பார்த்துக்கொண்டு இருக்க இது கனவு தானா ..? என்ற குழப்பமும் ஏற்பட்டுள்ளது.
இதோ அந்த ப்ரமோ..
Listen News!