• May 19 2024

தன்னுடைய முதல் படத்திலேயே தளபதி விஜய்யைப் போல நடித்த ஜெய்- கடும் கோபமடைந்த சசிகுமார்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ்த் திரையுலகில் இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட கலைஞர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சசிகுமார். "சுப்ரமணியபுரம்" என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகின்றார். இவ் அறிமுக திரைப்படமே இவருக்கு குறுகிய காலத்தில் அதிகளவு விருதுகளை வாங்கி குவித்தது.

இத்திரைப்படத்தில் ஜெய், சுவாதி, சமுத்திரக்கனி, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பல பிரபலங்களும் நடித்திருந்தனர். இது தொடர்பாக நடிகர் ஜெய் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் "சுப்ரமணியபுரம் படத்தினுடைய படப்பிடிப்பின் போது இயக்குநர் சசிகுமாரிடம் நிறைய முறை திட்டு வாங்கியுள்ளேன்" எனத் தெரிவித்திருந்தார்.

அதாவது ஜெய் "பகவதி" திரைப்படத்தின் மூலம் நடிகர் விஜய்க்கு தம்பியாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அப்படத்தில் அவர் அச்சு அசல் விஜய்யை போலவே இருப்பது மட்டுமல்லாமல், அவருடைய நடிப்பும் விஜய்யை போல இருப்பதும் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் நடிகர் ஜெய் "சுப்பிரமணியபுரம்" படத்திலும் விஜய்யை போலவே நடித்தார். இது இயக்குநர் சசிகுமாருக்கு கோபத்தை உண்டாக்கியது. அதனால் ஜெய்யிடம் "நாம் 80 காலகட்டத்தில் நடக்கும் கதையை தான் எடுக்கின்றோம். அந்த சமயத்தில் விஜய் கிடையவே கிடையாது, அதனால் அவரை போலல்லாமல் நீங்கள் நீங்களாகவே நடிக்க வேண்டும் "என்று கூறியிருந்தார்.

அதன் பிறகும் "சுப்பிரமணியபுரம்" படத்தில் ரொம்பவே கஷ்டப் பட்டு குறித்த அந்த கதாபாத்திரத்தில் ஜெய்யை நடிக்க வைத்தார் சசிகுமார். இந்த சம்பவத்தை சமீபத்தில் இடம்பெற்ற பேட்டியில் கூறிய ஜெய் "பகவதி படத்தில் பத்து நாட்கள் விஜய் சாருடன் நடித்ததாலோ என்னவோ எனக்கு அவரைப் போலவே நடிக்க வருகிறது. என்னால் பாவம் சசிகுமார் சார் தான் ரொம்பவும் கஷ்டப்பட்டு விட்டார்" என்று தெரிவித்திருக்கின்றார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement