பல ஆண்டு கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் கதை தற்போது திரைப்படமாக உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் மணிரத்னம்.
இப்படத்தில் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், பிரபு என பல நடிகர்கள் நடித்துள்ளனர்.
பிரமாண்டமாக தயாராகியுள்ள இப்படத்தின் டீசர் நேற்று மாலை பிரமாண்டமாக வெளிவந்தது. மேலும் இதில் இடம்பெற்ற ஒவ்வொரு காட்சியின் நம்மை மெய்சிலிர்க்க வைத்தது. இதை தொடர்ந்து இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் அடுத்தடுத்து வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது, முன்னணி நடிகர் சிம்பு தான் என்று கூறப்படுகின்றது. மணி ரத்னம், சிம்புவிடம் கால்ஷீட் கூட வாங்கிவிட்டாராம்.
ஆனால், தீடீரென ஏற்பட்ட சில காரணங்களால் இப்படத்தில் இருந்து சிம்பு வெளியேறினாராம்.அத்தோடு மணி ரத்னம் இயக்கத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு வெளிவந்த செக்க சிவந்த வானம் படத்தில் சிம்பு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!