• May 19 2024

ரஜினிகாந்த் சொந்தமாக கார் வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்டதற்கு இப்படியொரு காரணம் இருக்கா?- இதனால் தான் எமோஷனல் ஆனாரா?

stella / 7 months ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாகவும் சூப்பர் ஸ்டாராகவும் பல வருடங்களாக ஆட்டிப்படைத்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த்.இன்று தமிழ் சினிமா இவ்வளவு பிரபலமாகவும் பெரிய மார்க்கெட் உருவாகுவதற்கு முக்கிய காரணமாக இருப்பதே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான்.  இவருடைய நடிப்பில் இறுதியாக வெளியாகிய ஜெயிலர் திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றியும் பெற்றது.

இப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் முகமாக இப்படத்தின் தயாரிப்பாளரான கலாநிதி மாறன் ரஜினிக்கு புதிய கார் ஒன்றையும் வழங்கியிருந்தார்.அத்தோடு இவர்  பல கோடிக்கு அதிபதியாக இருக்கிறார். அவரிடம் பல கார்கள் அணிவகுத்து நிற்கின்றது. ஆனால் கூட ஜெய்லர் படத்தின் வெற்றிவிழாவில் இப்போது தான் பணக்காரராக ஃபீல் செய்வதாக பேசி இருந்தார்.


இதை கேட்ட பலரும் இப்போது ஜெயிலர் படத்தின் வெற்றிவிழாவில் ரஜினி ஏன் இத்தனை எமோஷனலாகி பேச வேண்டும் என பலர் கிசுகிசுத்தனர். ஒரு கார் கொடுத்ததற்கா இத்தனை பில்டப் செய்ய வேண்டும் எனவும் பேச்சுகள் எழுந்தது. ஆனால் இந்த பேச்சுக்கு பின்னால் ஒரு கதை இருக்கிறதாம்.

ரஜினியின் ஆரம்பகாலங்களில் அவரிடம் சொந்தமாக ஒரு கார் கூட இல்லையாம். 

கம்பெனியின் காரில் தான் சினிமா ஷூட்டிங்கிற்கு செல்வாராம். 16 வயதினிலே பட சமயத்தில் கூட கவுண்டமணியை ஆழ்வார்பேட்டையில் இறக்கிவிட்டு தான், ரஜினிகாந்தினை மியூசிக் அக்கடமியில் இறக்கி விடுவார்களாம்.கடைசியாக வீட்டுக்கு போகும் நேரத்தில் பசி மயக்கமே வந்துவிடுமாம். இருந்தும் கட்டுப்படுத்திக் கொண்டு அமர்ந்து வருவாராம். 


தானும் நன்றாக சம்பாரித்து சொந்தமாக ஒரு கார் வாங்க வேண்டும். இதுதான் தன்னுடைய ஆசை என கவுண்டமணியிடம் புலம்பி இருக்கிறார்.அப்படி கஷ்டப்பட்ட ரஜினி தற்போது பல கோடிகளுக்கு அதிபதியாகி இருக்கிறார். இதனால் தான் ஒரு தயாரிப்பாளரிடம் இருந்து வந்த காரை மிகப்பெரிய சொத்தாக நினைப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.


Advertisement

Advertisement