தமிழ்நாட்டின் முக்கியமான இயற்கை வளங்களில் ஒன்றாக விளங்கும் காவேரி நதி, நீண்டகாலமாக தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்துக்கு இடையில் தண்ணீர் விநியோகத்தைப் பற்றிய வாதப் பிரதிவாதங்களுக்குத் தூண்டப்பட்ட தலைப்பாக இருந்து வருகின்றது. எனினும், ஒரு நடிகர் அத்தகைய பிரச்சனையை ஒரு கிளாஸ் தண்ணியோட முடித்து வைத்தது தற்பொழுது சமூக ஊடகங்களில் பேசப்பட்டு வருகின்றது.
சமீபத்தில் நடைபெற்ற ஒரு பேட்டியில் பங்கேற்ற நகைச்சுவை நடிகர் கூல்சுரேஷ், தன்னிடம் பத்திரிகையாளர்கள் கேட்ட சில கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போது, மிக உணர்ச்சிவசமான வகையில் பேசியிருந்தார்.
அவர் கூறியதாவது, “கர்நாடகாவோடு காவேரி பிரச்சனை வந்தப்போ, கர்நாடக முதல்வரும் தமிழ்நாடு முதல்வரும் என்ன முடிவெடுக்கிறதென்று குழம்பிக்கொண்டிருந்தார்கள். எல்லையில் ரொம்ப பதட்டமாக இருந்தது. ஆனால் என் தலைவர் சிம்பு ஒரு கிளாஸ் தண்ணியை வைத்து நீயும் நானும் வேற இல்லை, என்று அந்தப் பிரச்னையை தீர்த்துவைத்தார்.” என்றார்.
இந்த வீடியோ வெளியான பிறகு, சமூக ஊடகங்களில் சிம்புவுக்கு பாராட்டுக்கள் குவிந்தது. சிம்பு நடிகராக மட்டுமல்ல, ஒரு பொதுவாழ்வில் நம் எல்லோருக்கும் உரிய உரிமைகள், மனித உறவுகள் பற்றி எப்போதும் பேசக்கூடியவர் என்பதனை இந்தக் கருத்துக்கள் மூலம் அறிந்து கொள்ளமுடிகிறது.
Listen News!