தமிழ் சினிமாவில் பல்வேறு கதாப்பாத்திரங்களில் நடித்து தனக்கென ஓர் இடத்தை உருவாக்கிய நடிகர் ராஜேஷ் அவர்கள் இன்று காலமானார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் செய்தி திரையுலகில் பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், நடிகரின் மிக நெருக்கமான நண்பராகவும், குணச்சித்திர நடிகராகவும் பெயர் பெற்ற நடிகர் தியாகு, ஒரு ஆழமான இரங்கல் உரையைத் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியவை ரசிகர்களை மிகுந்த உணர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.
நடிகர் ராஜேஷ் திரையுலகிற்கு வந்ததிலிருந்து, அவர் எந்தத் துறையிலும் அழுத்தம் இல்லாமல், மென்மையான நடிப்பின் வழியாகவே மனங்களை வென்றவர். காதல், குடும்பம், தந்தை என எந்த வேடத்தில் நடித்தாலும் ஒரு இயற்கைத்தன்மை கொண்டு மிளிர்ந்தவர்.
90களிலும் தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக "அச்சமில்லை அச்சமில்லை", "என் உயிர் தோழன்" போன்ற படங்கள் அவரது திறமையை நன்கு வெளிப்படுத்தியவை. தமிழ் திரையுலகில் மென்மையான கதாப்பாத்திரங்களுக்கான அடையாளமாக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இத்தகைய நடிகர் குறித்து தியாகி கூறியதாவது, “எனது இனிய நண்பர் ராஜேஷ். மிகச்சிறந்த நடிகராகவும் இருந்தார். அடிக்கடி நாங்க meet பண்ணுற வாய்ப்பு கிடைக்கும். என்னை அவர் அன்பாக உபசரிப்பார். எனக்கு சாப்பாடு எல்லாம் கொண்டுவந்து தருவார். நிறைய புத்தகங்களும் எழுதியிருக்கார். அத்தகைய நடிகர் இறந்ததை நினைத்து நான் மிகவும் கவலைப்படுறேன். அவருக்கு நிம்மதியே இல்ல. என்ன இருந்தாலும் அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன்.” என்றார்.
இதன்மூலம் நடிகர் ராஜேஷ், வெறும் நடிகராக மட்டுமல்லாது, தன்னுடைய ஆழ்ந்த சிந்தனைகளை நூல்கள் மூலமாகவும் வெளிப்படுத்தியவர் என்பது தெரியவந்துள்ளது. நடிகர் ராஜேஷின் உடல் இன்று அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நடிகர்கள், இயக்குநர்கள், எழுத்தாளர்கள் மற்றும் திரையுலக நண்பர்கள் என அனைவரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
Listen News!