• Apr 27 2024

அஜித் நடிக்கவேண்டிய கதையில் பிரபல வாரிசு நடிகர்…வெளியான சுவாரஸ்யமான தகவல்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

சிம்பு தற்போது தமிழ் சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்க்ஸை வெற்றிகரமாக துவங்கியுள்ளார். இடையில் சில ஆண்டுகள் சிம்பு பல கஷ்டங்களை அனுபவித்துள்ளார் என்றுதான் கூறவேண்டும். படங்கள் வெளியாகாமல், வெளியானாலும் வெற்றிபெறாமலும் இருந்து அவரின் ரசிகர்களுக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.

பல சர்ச்சைகள் மற்றும் வழக்குகள் ஒருபக்கம், உடல் எடை கூடி விமர்சனத்திற்கு உண்டானது மறுபக்கம் என சிம்பு எங்கு திரும்பினாலும் பிரச்சனைக்கு மேல் பிரச்சனையில் சிக்கி தவித்தார்.இந்நிலையில் இதெல்லாம் மாநாடு படம் வெளியானதற்கு பிறகு அப்படியே மாறி விட்டது என்று தான் கூற வேண்டும்.

மேலும் வாழ்க்கை ஒரு வட்டம் என்பது போல சிம்பு மாநாடு படத்திற்கு பிறகு வெற்றியை மட்டுமே சந்தித்து வருகின்றார். மாநாடு படத்தின் மாபெரும் வெற்றி, டாக்டர் பட்டம், அடுத்தடுத்து படங்கள், பிக் பாஸ் தொகுப்பாளர் வாய்ப்பு என சிம்பு கலக்கி வருகின்றார்.

இந்நிலையில் சிம்பு தற்போது வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் இப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து சிம்பு பத்து தல, கொரோனா குமார் ஆகிய படங்களிலும் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பத்து தல படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சமீபத்தில் இப்படத்தை பற்றி கூறியுள்ளார். அப்போது இப்படத்தில் சிம்பு கதாபாத்திரத்திற்கு முதலில் அஜித்தை நடிக்க வைக்க தான் நினைத்தோம். ஆனால் ஒரு சில காரணங்களால் அது நடக்காமல் போனது.

மேலும் அதன் பின்னர் தான் சிம்பு இக்கதாபாத்திரத்தில் நடித்தார் என்றார். இந்நிலையில் கிருஷ்ணா இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகும் இப்படத்தில் சிம்புவுடன் கௌதம் கார்த்திக்கும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement