• May 10 2024

நான் கஷ்டப்பட்டு சம்பாதிச்ச காசு வீண் போகாது...எல்லாத்துக்கும் கடவுள் ஒருத்தன் இருக்கான்;சூரி

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

திரைப்படங்களில் பல்வேறுப்பட்ட கதாபாத்திரங்களை ஏற்று நடித்து பின்னர் நகைச்சுவை நடிகராக தமிழ் திரையுலகில் அங்கீகரிக்கப்பட்டவர் நடிகர் சூரி. விஷ்ணு விஷால் நடித்த "வெண்ணிலா கபடி குழு" என்ற திரைப்படத்தில் இவர் நடித்த கதாபாத்திரமானது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகின்ற இவர் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக சித்தரிக்கப்படுகின்றார். நடிகர் விஷ்ணு விஷாலும் சூரியும் தொடர்ந்து பல படங்களில் இணைந்து நடித்து நெருங்கிய நண்பர்களாகவும் இருந்தனர்.

சினிமாவைத்தாண்டியும் நல்ல நண்பர்களாக இருந்த இவர்கள் இருவரும் தற்போது பிரிந்து விட்டார்கள். ஏனெனில் நிலம் வாங்கித் தருவதாகக் கூறி 2.70 கோடி ரூபாயினை தன்னிடம் இருந்து வாங்கி பண மோசடி செய்ததாக நடிகர் சூரி அடையாறு காவல் நிலையத்தில் நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை மற்றும் பிரபல தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் உள்ளிட்டோர் மீது புகார் ஒன்றினை அளித்திருந்தார்.

நடிகர் சூரியின் அந்தப்புகார் தொடர்பாக தற்போது மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடாத்தி வருகின்றனர். 6 மாத காலத்திற்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், சூரி மற்றும் நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையிடம் குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரிகள் பல மணி நேரம் விசாரணைகளை நடத்தி உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த வாரம் சூரி ஆஜராகி தனது வாக்குமூலத்தை கொடுத்திருந்தார். அதனை தொடர்ந்து ஆஜரான விஷ்ணு விஷால் மற்றும் அவரது தந்தை ரமேஷ் குடவாலா ஆகியோர் தங்கள் மீது எந்த குற்றமும் இல்லை என மத்திய குற்றப்பிரிவு போலீஸ் முன் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், நகைச்சுவை நடிகர் சூரியிடம் செய்தியாளர்கள் இதுபற்றி கேட்டிருந்தனர். அப்போது தான் சூரி அதற்குப் பதிலளிக்கும் வகையில் இவ்வாறு கூறியுள்ளார். எனக்கு நியாயம் கிடைக்கும், அதுக்குத்தான் கோர்ட்டும் காவல்துறையும் இருக்கின்றனர். நான் ஒவ்வொரு நாளும் கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணம், அவ்வளவு எளிதாக வீணாகி விடாது. கடவுள் இருக்காங்க, கடவுளுக்கு அடுத்ததாக நான் கோர்ட்டை நம்புறேன். இதனால் நிச்சயம் நல்லது நடக்கும்னு நம்புறேன். கட்டாயம் எனக்கு நல்லது நடக்கும்ங்க, போலீசார் இந்த விவகாரத்தில் தீவிரமாக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்" என நடிகர் சூரி உருக்கமாக பேசி உள்ளார்.

இதைக் கேள்விப்பட்ட நடிகர் சூரியின் ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement