• May 19 2024

என் கணவருக்கு யாராவது உதவி செய்திருந்தால் காப்பாற்றி இருப்பேன்- நடிகை மீனா எடுத்த அதிரடி முடிவு..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

கணவர் மறைந்த பிறகு நடிகை மீனா உடல் உறுப்பு தானம் குறித்து அதிரடியாக முடிவு ஒன்றை எடுத்துள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்,மலையாளம், தெலுங்கு போன்ற  தென்னிந்திய மொழி படங்களில் கவனம் செலுத்தி வந்த நடிகை தான் மீனா. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய இவர்  ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், சரத்குமார், விஜயகாந்த், என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் 

 திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்தும் கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் நடித்து வந்தார். அந்த வகையில் இறுதியாக ரஜினி நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படத்தில் நடித்திருந்தார்

நடிகை மீனாவின் கணவர் வித்யா சாகர் கொரோனா தொற்று  பாதிப்புக்கு உள்ளாகி அதிலிருந்து மீண்டார். அதன் பின்னர் கடுமையான நுரையீரல் பாதிப்பால் ஆக்சிஜன் சிலிண்டருடன் சிகிச்சை பெற்று வந்தார்.மேலும் அவருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைதான் ஒரே தீர்வு என்ற நிலையில், உடல் உறுப்புக்காக பதிவு செய்து காத்திருந்தனர்.



6 மாதங்களுக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த வித்யா சாகருக்கு மாற்று உறுப்புக்காக 3 மாதத்திற்கும் மேலாக காத்திருந்த நிலையில், இருதயத்திலும் பாதிப்பு  திடீரென ஏற்பட்டது. இதையடுத்து கடந்த ஜூன் மாதம்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கணவரின் இறுதி சடங்குகளை மீனாவே செய்தது கல் நெஞ்சத்தையும் கரைய வைத்தது.

கணவரின் மரணத்திற்கு பின்னர் வீட்டிலேயே முடங்கிக் கிடந்த மீனாவை அவரின் தோழிகளான சங்கவி,சங்கீதா,ரம்பா, குஷ்பு, ராதிகா என பலரும் வீடு தேடி சென்று அவரை பார்த்து ஆறுதல் கூறி அவரை வெளியில் அழைத்து வந்தனர். குடும்பம் குட்டி என்று இருந்த ரம்பா, மீனாவுக்காக வெளிநாட்டிலிருந்து வந்தார்.எனினும்  தற்போது, மீனா மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளார்.


இவ்வாறுஇருக்கையில் ,நடிகை மீனா, சர்வதேச உடல் உறுப்பு தான தினத்தையொட்டி, தனது உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், என் கணவர் வித்யாசாகருக்கு உறுப்புகள் தானம் செய்ய யாராவது முன்வந்து இருந்தால் அவரது உயிர் காப்பாற்றப்பட்டிருக்கும். அப்படி நடந்திருந்தால் என் வாழ்க்கையே மாறி இருக்கும்.மேலும்  ஒருவர் உறுப்பு தானம் செய்வது மூலம் 8 பேருக்கு மறுவாழ்வு கிடைக்கிறது. இதன் முக்கியத்துவத்தை நான் உணர்ந்து கொண்டேன். அந்த வகையில் எனது உடல் உறுப்புகளையும் நான் தானம் செய்கிறேன் என அவர் பதிவிட்ட பழைய பதிவினை அவரது ரசிகர்கள் தற்போது ஷேர் செய்து வருகின்றனர்.


Advertisement

Advertisement