• Apr 19 2024

நான் ஜெயிச்சா 25 லட்ச ரூபாய் அவங்களுக்கு தான்".. பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

100 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் -6 இன்றுடன் நிறைவுபெற இருக்கிறது. இதனிடையே இந்த சீசனின் வெற்றியாளர் யார்? என்பதுதான் இப்போது சமூக வலை தளங்களில் பேச்சாக உள்ளது.

முன்னதாக, பைனலிற்குற்கு அசீம், விக்ரமன், மைனா, அமுதவாணன் மற்றும் ஷிவின் ஆகியோர் தகுதி பெற்றிருந்தனர். இதனிடையே வீட்டுக்குள் முன்னதாக வீட்டில் பண மூட்டையை பிக்பாஸ் அறிமுகம் செய்திருந்தார். இந்த அறிவிப்பு வெளிவந்த உடனேயே கதிர் தான் பண மூட்டையுடன் வெளியேறுவதாக தெரிவித்து இருந்தார்.

இதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டுக்குள் மீண்டும் பணப்பெட்டி அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இவ்வாறுஇருக்கையில் , அமுதவாணன் பணப்பெட்டியை எடுத்து தான் வெளியேறுவதாக அறிவித்து அனைவரையும் அதிர்ச்சியடைய செய்திருந்தார். இப்படி பரபரப்பான சம்பவங்களுக்கு இடையே பிக்பாஸ் மிட் வீக் எவிக்ஷன் குறித்து வெளியிட்ட அறிவிப்பு போட்டியாளர்களை திகைக்க வைத்திருந்தது.

இதன்மூலம் மைனா நந்தினி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார். ஆகவே, தற்போது விக்ரமன், அசீம் மற்றும் ஷிவின் ஆகியோர் மட்டுமே எஞ்சியுள்ளனர். இந்நிலையில் மூவரும் ரசிகர்களிடம் தங்களுக்கு ஒட்டு அளிக்குமாறும், தங்களுக்கு ஏன் வாக்கு அளிக்க வேண்டும்? எனவும் விளக்கம் கொடுத்து வருகின்றனர்.


அந்த வகையில் கேமரா முன்னிலையில் பேசும் அசீம்,"நான் செய்த சிறு தவறுகளை மன்னித்து கோபத்தில் பேசிய வார்த்தைகளையும் மன்னிக்க வேண்டுகிறேன். தப்பு செய்தால் அது தவறு என்று தெரிந்தவுடன் ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்கும் குணம் எனக்கு இருக்கிறது. உங்களிடம் உரிமையாக என்னை வெற்றி பெறச் செய்யுமாறு கூறுகிறேன்"

"கொரோனாவில் பெற்றோரை இழந்த பள்ளி மாணவர்களுக்கு நான் நிறைய உதவிகள் செய்து கொண்டிருக்கிறேன். அவர்களுக்கான கல்வி செலவை ஏற்கவேண்டும் என்பது என்னுடைய கனவு. ஆனால், நானும் சாதாரண பின்புலத்தில் இருந்து வந்தவன் தான். 



அத்தோடு இந்த நிகழ்ச்சியில் நான் ஜெயித்தால் 25 லட்சம் அவர்களுக்கு சென்றடையுமாறு செய்யவிருக்கிறேன். என்னிடம் போதிய பணம் இல்லாததால் என்னை ஜெயிக்க வைத்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். நான் வீழமாட்டேன் விழுந்தாலும் திமிரி எழும் தமிழன்" என உருக்கமாக குறிப்பிட்டிருக்கிறார்.இவ்வாறாக மாறி மாறி ஷவினும் விக்ரமனும் வாக்களியுங்கள் என கேட்டு இருந்தனர்.



அத்தோடு நேற்றைய எபிசோட்டில் பிக்பாஸ் வீட்டுக்குள் கவின் வந்து தனது டாடா படத்தின் டீசரை போட்டு காட்டி இருந்தார்.அதன் பிறகு உள்ளே வந்த பழைய போட்டியாளர்கள் சென்றிருந்தார்கள்.அதன் பிறகு மூவரும் பினாலேக்கு  நிற  அழகாக வெளிக்கிட்டு நின்றார்கள்.இத்துடன் நேற்றைய எபிசோட் முடிவடைந்தது.

Advertisement

Advertisement

Advertisement