• Sep 08 2024

’வேட்டையன்’ படத்தை வேண்டுமென்றே தாமதம் செய்கிறாரா இயக்குனர்? காரணம் சூர்யாவா?

Sivalingam / 1 month ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஞானவேல் இயக்கத்தில், லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’வேட்டையன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதாக கூறப்படும் நிலையில் தற்போது திடீரென இன்னும் 20 நாள் படப்பிடிப்பு நடத்த வேண்டிய உள்ளது என இயக்குனர் ஞானவேல் கூறியதால் லைகா நிறுவனம் கடும் அதிருப்தி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் ’வேட்டையன்’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதாகவும் குறிப்பாக ரஜினிகாந்த் காட்சிகள் முடிந்து விட்டதாகவும் செய்திகள் வெளியானது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரஜினிகாந்த் தன்னுடைய பகுதிக்கான டப்பிங் பணியை தொடர்வார் என்று கூறப்பட்ட நிலையில் டப்பிங் பணி இன்னும் ஆரம்பமாகவில்லை என்று கூறப்படுகிறது.



இந்த நிலையில் ’வேட்டையன்’ படத்தை வேண்டும் என்றே இயக்குனர் ஞானவேல் தாமதம் செய்வதாக திரை உலக வட்டாரத்தில் பரபரப்பான ஒரு தகவல் பரவி வருகிறது. ’வேட்டையன்’ படத்தை அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் செய்ய வேண்டும் என்று லைகா நிறுவனம் திட்டமிட்டு இருப்பதாகவும் விரைவில் இது குறித்து அறிவிப்பை வெளியிட போவதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இயக்குனர் ஞானவேலுக்கு மிகவும் நெருக்கமான சூர்யாவின் ‘கங்குவா’ படம் அக்டோபர் 10ஆம் தேதி வருவதால் ’வேட்டையன்’ படத்தின் படப்பிடிப்பை வேண்டும் என்றே தள்ளி போடுவதாகவும் படத்தை முடித்து கொடுத்தால் தானே அக்டோபர் 10ஆம் தேதி லைகா ரிலீஸ் செய்ய முடியும் என்ற ரீதியில் அவருடைய நடவடிக்கை இருப்பதாகவும் வதந்திகள் பரவி வருகிறது.

இது வதந்தியா அல்லது உண்மையா என்று தெரியாவிட்டாலும் அக்டோபர் 10ஆம் தேதி லைகா நிறுவனம் திட்டமிட்டபடி ’வேட்டையன்’ படத்தை ரிலீஸ் செய்ய வாய்ப்பு இல்லை என்றே திரை உலக வட்டாரங்கள் கூறி வருகின்றன.

Advertisement

Advertisement