• Apr 25 2024

இந்த சீஸனின் வெற்றியாளர் இவர் தானா ? என்னது அதுக்குள்ள இதுல update ஆகிட்டு..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது இறுதிகட்டத்தை எட்டி உள்ளது. இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட், குயின்சி, ஜனனி, ராம், ஆயிஷா, தனலட்சுமி, மணிகண்டன்,ரச்சித்தா ஆகியோர் வெளியேறி உள்ளனர். தற்போது அசீம், விக்ரமன், ஷிவின் ஆகிய மூன்று பேர் மட்டும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

அத்தோடு, கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் பணப் பை டாஸ்க் அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தது. பொதுவாக பணப் பெட்டி டாஸ்க் மிகவும் சுவாரசியமாக இருக்கும் பிக் பாஸ் ஒவ்வொரு கட்டமாக தொகையை ஏற்றுக்கொண்டு இருக்க அதை யார் எடுத்தச் செல்வார் என்ற ஒரு ஆர்வம் ஏற்படும். அந்த வகையில் இந்த சீசனில் அறிமுகப்படுத்தப்பட்ட பணப் பை டாஸ்க் ஒரு சில நாட்கள் நீளும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், ஆரம்ப தொகையான 3 லட்சத்தை எடுத்துக்கொண்டு வெளியேறினார் கதிர். மேலும் இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் வரலாற்றில் முதல்முறையாக இரண்டாம் முறையாக பணப்பெட்டி டாஸ்க் கொடுக்கப்பட்டுஇருந்தது. மேலும் இந்த முறை ஒரு ஒரு நிமிடத்திற்கும் பணத்தின் மதிப்பு கூடிக் கொண்டே இருக்கும் என்று பிக் பாஸ் தெரிவித்து இருந்தார். எனவே இந்த முறை பணப்பெட்டி தொகை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

பிக் பாஸில் இருக்கும் விஜய் டிவி பிரபலங்களான அமுதவாணன் மற்றும் மைனா நந்தினி ஆகிய யாராவது இருவருக்கு பணப் பெட்டி செல்ல வேண்டும் என்றே மீண்டும் பணப் பெட்டி டாஸ்க்கை செட்டப் செய்து இருப்பதாக பிக் பாஸ் ரசிகர்கள் பலரும் தெரிவித்து வந்தனர்கள்.அதற்கு முக்கிய காரணமே கண்டிப்பாக மைனா மற்றும் அமுதவாணன் இருவரும் டாப் 2 இடத்தை பிடிக்க வாய்ப்பில்லை என்பது பலரும் அறிந்த ஒன்று தான்.

எனவே, மைனா அல்லது அமுதவாணன் இருவரில் யாராவது ஒருவர் எடுத்து செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இப்படி ஒரு நிலையில் இன்று 11,75,000 பணத்துடன் அமுதவாணன் வெளியேறிவிட்டார். அமுதவாணன் பணப் பெட்டியுடன் வெளியேறியதால் நேற்றைய நிகழ்ச்சியில் அசீம், விக்ரமன், மைனா, சிவின் ஆகிய நான்கு பேர் மட்டும் இறுதிப் போட்டி நோக்கி காத்துக்கொண்டிருந்தார்கள்.


மேலும் இந்த சீசனில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. ஒருபுறம் அசின் வெல்வார் என்றும் மறுபுறம் விக்ரமன் வெல்வார் என்றும் கூறப்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலானோர் விக்ரம் தான் இந்த சீசனின் வெற்றியாளர் என்று கூறிக்கொண்டு வருகிறார்கள்.மேலும்  இப்படி ஒரு நிலையில் கூகுள் வலைதளத்தில் இந்த சீசனின் வெற்றியாளர் விக்ரமன் என்று அப்டேட் செய்யப்பட்டு இருக்கிறது இதனால் இந்த சீசன் வின்னர் விக்ரம்தானா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.


Advertisement

Advertisement

Advertisement