• Apr 26 2024

அது நடந்தால் நான் இறந்துவிடுவேன் - அதிர்ச்சியடைந்த பிரபலம், நேர்ந்தது என்ன?

Thiviya / 1 year ago

Advertisement

Listen News!

கரண் ஜோஹரின் அரட்டை நிகழ்ச்சியான காஃபி வித் கரண் 7 இன் 12வது எபிசோடில் கௌரி கான் தனது நண்பர்களுடன் நிகழ்வில்  கலந்து கொண்டார், மற்றும் பாலிவுட் மனைவி நட்சத்திரங்களின் அற்புதமான வாழ்க்கை திரைப்பட  நாயகிகளான - மஹீப் கபூர் மற்றும் பாவனா பாண்டே ஆகியோர் நிகழ்ச்சியில் அறிமுகமானார்கள்.


நட்சத்திர மனைவிகள் தங்கள் கணவர்கள், பாலிவுட்டின் உள்வட்ட வாழ்க்கை மற்றும் பலவற்றைப் பற்றிய சொல்லப்படாத ரகசியங்களைப் பகிர்ந்து கொண்டனர். ரேபிட் ஃபயர் ரவுண்டில், பாவனா பாண்டே தனது மகள்கள் அனன்யா மற்றும் ரைசா ஆகியோருக்கு டேட்டிங் ஆலோசனைகளை வழங்குவதைத் தவிர, தனது குற்ற உணர்ச்சி பற்றியும் பேசி இருந்தார்.


பாவனா தனது குற்ற உணர்ச்சியைப் பற்றிப் பேசுகையில் அவர் தனது மகள்கள் அனன்யா மற்றும் ரைசா ஆகியோருக்கு டேட்டிங் ஆலோசனை வழங்கியது குறித்துப் பின்வருமாறு பேசினார் . ஜாலியாக இருங்கள் ஆனால் இந்த வயதில் சீரியஸாக வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதாகக் கூறினார் .

கரண் ஜோஹர் அவர்கள் கர்ப்பமாக இருக்கும் ஒரு செய்தியை கேள்விப்பட்டால் என்ன செய்வீர்கள் என கேட்டார், அதற்கு  பாவனா அதிர்ச்சியான பதிலை அளித்து, அது நடந்தால் தான் இறந்துவிடுவேன் என்று கூறினார்.


Advertisement

Advertisement

Advertisement