• Apr 26 2024

பிரபாஸ் இப்படி செய்வார்ன்னு நினைக்கல என் வாழ் நாளில் மறக்க முடியாது- சூர்யா சொன்ன சுவாரஸ்யம்!

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல்யமான நடிகராக இருப்பவர் தான் சூர்யா. இவருக்கு தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு சினிமாவிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். குறிப்பாக 'கஜினி' படத்திலிருந்து தெலுங்கிலும் தனது ஒவ்வொரு படத்தையும் வெளியிட்டு வருகிறார். 

'ஆகாசம் நீ ஹத்து ரா', 'ஜெய் பீம்' போன்ற படங்களின் மூலம் மீண்டும் நல்ல வரவேற்பை பெற்ற சூர்யா, அடுத்தடுத்து படங்களை தெலுங்கில் அறிவித்து வருகிறார்.அந்த வகையில் அண்மையில் ஓர் நேர்காணலில் கலந்து கொண்டு பேசியபோது  பிரபாஸ் வீட்டில் சமைத்த உணவு குறித்து சூர்யா பகிர்ந்து கொண்டார். 

”நான் ஷூட்டிங்கில் ஹைதராபாத்தில் இருந்தபோது,​​பிரபாஸ் என்னை அழைத்து இரவு உணவிற்கு அழைத்தார். நான் வருகிறேன் என்று சொன்னேன், ஆனால் எனது படப்பிடிப்பு இரண்டு மணி நேரம் தாமதமாகி விட்டது. மாலை 6 மணிக்கு தொடங்க இருந்த ஷூட்டிங், இரவு 8 மணிக்கு தொடங்கி இரவு 11:30 மணி வரை நீட்டிக்கப்பட்டது. நான் பிரபாஸை பிறகு சந்திக்கலாம் என்று நினைத்தேன், அப்போது அவரிடம் மன்னிப்பு கேட்கலாம் எனவும் திட்டமிட்டிருந்தேன். அன்று இரவு ஹோட்டல் உணவு அல்லது தயாரிப்பு நிறுவன மெஸ்ஸில் இருந்து சாப்பாடு வரும் என நினைத்தேன்.


இரவு 11.30 மணியளவில், ஹோட்டலின் தாழ்வாரத்தில் பிரபாஸ் எனக்காக சாப்பிடாமல் காத்துக்கொண்டிருந்தது அறிந்து அதிர்ச்சியடைந்தேன். அவர் அம்மா தயாரித்த உணவை எனக்கு கொண்டு வந்தார். என் வாழ்நாளில் அவ்வளவு சுவையான பிரியாணி சாப்பிட்டதில்லை” என்றார் சூர்யா.

தற்போது பிரபாஸ் இந்திய அளவில் மிகப்பெரிய பட்ஜெட் படங்களில் பிஸியாக இருக்கிறார். 'பாகுபலி' படத்தின் மூலம் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைப் பெற்ற பிரபாஸுக்கு, பின்னர் வெளியான 'சாஹோ', 'ராதே ஷ்யாம்' ஆகிய படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றியை தரவில்லை. இருப்பினும் இதனை அடுத்து இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் என்னும் திரைப்படத்தில் நடித் வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement

Advertisement