• Apr 23 2024

திடீரென மூச்சு பேச்சு இன்றி மயங்கி விழுந்த அசீம்- பதறிப் போய் ஓடிய ஏடிகே மற்றும் கதிரவன்- வெளியாகிய பரபரப்பான வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ஆறாவது சீசனில் ஒவ்வொரு எபிசோடும் அசத்தலாக சென்று கொண்டிருப்பதற்கு காரணம், ஒவ்வொரு வாரமும் கொடுக்கப்படும் புது புது டாஸ்க்குகள் தான்.கடந்த வாரம் நீதிமன்ற டாஸ்க் முடிவடைந்திருந்த சூழ்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து ராபர்ட் மாஸ்டர் வெளியேறி இருந்தார்.

இதனைத் தொடர்ந்து இந்த வாரத்திற்கான டாஸ்க்காக பழங்குடியின மக்கள் vs ஏலியன்ஸ் என்னும் டாஸ்க் தரப்பட்டுள்ளது. இதில் பழங்குடியின மக்களாக அசீம், ஷிவின், விக்ரமன், ஏடிகே, ராம், விஜே கதிரவன், மைனா இருக்கின்றனர். ஏலியன்களாக தனலட்சுமி, குயின்ஸி, ஜனனி, அமுதவாணன், ரச்சிதா, ஆயிஷா, மணிகண்டா ஆகியோர் உள்ளனர்.


இந்த டாஸ்க் ஆரம்பித்த நாளிலிருந்து அசீம் ஹவுஸ்மேடஸ் அனைவருடனும் மோதலில் ஈடுபட்டு வருகின்றார். இந்த நிலையில் நேற்றைய தினம் ஜனனியுடன் மோதலில் ஈடுபட்டு பெரிய பஞ்சாயத்தாக முடிந்தது. அதே போல இன்றைய தினம் தனலட்சுமி அசீம் மீது முட்டை எல்லாம் அடித்து வெறுப்பேற்றினார்.


இந்த நிலையில் டாஸ்க் முடிவடைந்ததைத் தொடர்ந்து காரட்ன் ஏரியாவில் அசீம் இருக்கும் போது திடீரென மயங்கி விழுந்து விடுகின்றார். இதனால் கதிரவன் ஏடிகே ஓடிப் போய் பார்க்கின்றனர்.அத்தோடு தண்ணீர் தெளித்தும் அவர் எழும்பாததால் மெடிக்கல் ரூமுக்கு கொண்டு போகின்றனர்.இதனால் அசீம் ரசிகர்கள் வெகு சீக்கிரத்தில் அசீம் குணமடைய வேண்டும் என கூறி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement