• Apr 26 2024

என் மகனிடம் நான் மன்னிப்புக் கேட்க வேண்டும்... விவாகரத்தின் பின் மனம் திறந்து பேசிய விஷ்ணு விஷால்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகர் விஷ்ணு விஷால். இவர் 'வெண்ணிலா கபடிகுழு, நீர்ப்பறவை' போன்ற திரைப்படங்களில் நாயகனாக பல ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டு இருக்கின்றார்.


விஷ்ணு விஷால் ஆரம்பத்தில் ஒரு கிரிக்கெட் வீரராக இருந்தே பின்பு நடிகராக மாறியவர். அந்தவகையில் இவரின் காலில் காயம் ஏற்பட அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது. பின்னர் சினிமாவில் நடிக்க வேண்டும் ஆசை வர இப்போது நிறைய வெற்றிப்படங்களில் நடித்து பல விருதுகளை வென்று சாதனையும் படைத்து வருகின்றார்.

இவரின் குடும்ப வாழ்க்கையை எடுத்துப் பார்த்தால் இவர் 2010-ஆம் ஆண்டு ரஜினி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் ஒரு மகனும் இருந்தார், ஆனால் இடையில் ஏற்பட்ட ஒரு சில கருத்து வேறுபாடுகள், மற்றும் பிரச்சனைகள் காரணமாக விவாகரத்து பெற்றுப் பிரிந்தனர்.


இதனைத் தொடர்ந்து பின் ஜுவாலா கட்டா என்பவரை மறுமணம் செய்த விஷ்ணு விஷால் தற்போது படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் இவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டன.

அதில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றால் நீங்கள் யாரிடம் கேட்பீர்கள் என கேட்டதற்கு அவர், வருங்காலத்தில் எனது மகனிடம் மன்னிப்பு கேட்பேன், காரணம் அவனது அம்மா-அப்பா ஒன்றாக இல்லை, அதனால் கேட்பேன் என கண்ணீர் மல்க கூறியுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement