• May 19 2024

நமிதாவை மட்டும் தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்- இப்படி செய்தால் எப்படி பிடிக்காமல் போகும்- சரத்குமார் கூறிய அதிர்ச்சித் தகவல்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் தான் சரத்குமார். இவர் ஆரம்பத்தில் பிரபு, கார்த்திக், விஜயகாந்த் போன்றவர்களின் படங்களில் துணை நடிகராக நடித்தே கதாநாயகனாக அறிமுகமாகினார். அதிலும் இவர் நடிப்பில் வெளியாகிய சூரியன் திரைப்படம் மெகா ஹிட்டாக அமைந்தது.

மேலும் சூப்பர் ஹீரோ என்று அழைக்கப்படும் இவர் நடிப்பில் வெளியாகிய கட்டபொம்மன், அரண்மனை காவலன், நம்ம அண்ணாச்சி, போன்ற பல படங்கள் தொடர்ந்து ஹிட் ஆனது. அதன் பிறகு பிளாக் பஸ்டர் படமாக அமைந்தது தான் நாட்டாமை. இந்த படத்தில் இவரது கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

தொடர்ந்து பல திரைப்படங்களில் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கும் இவர் 80களில் தொடங்கி இன்று வரை தனக்கென ஒரு தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார். எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் தனக்கு ஏற்றவாறு நடித்து ஹிட் கொடுப்பதில் வல்லவர்.

இந்த நிலையில் பல நடிகைகள் தன்னுடன் நடித்திருந்தாலும் தனக்கு நமிதாவை மிகவும் பிடிக்கும் என்று இவர் கூறியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மேலும் தனக்கு ஏன் நமிதாவை பிடிக்கும் என்ற காரணத்தையும் நடிகர் சரத்குமார் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்," நமிதா ரொம்ப நல்ல பர்சன், நமிதா தன் திருமணத்திற்கு என்னை நேரில் வந்து அழைத்தார், திருமணத்திற்கு திருப்பதிக்கு சென்று இருந்தேன். திருமணமேடையில் நின்று கொண்டிருந்த அவர்," நான் வருவதை கவனித்து இறங்கி வந்து என் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார்,

அவர் அப்படி செய்ய வேண்டும் என்ற எந்த ஒரு அவசியமும் இல்லை, ஆனால் அந்த இடத்தில் அவர் அப்படி செய்தது என் மனதிற்கு மிகவும் மகிழ்ச்சி அளித்தது. இந்த விஷயத்தை என்னால் மறக்கவே முடியாது என்று கூறியுள்ளார். நமிதா என்னை எந்த அளவுக்கு மதிக்கிறார் என்பதை நான் அப்போது உணர்ந்து கொண்டேன் என்று கூறியுள்ளார்.

மேலும் சரத்குமார், நமிதாவுடன் இணைந்து ஏய், சானக்கியா,1977 போன்ற சில படங்கள் மட்டுமே நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement