• May 04 2024

நான் அப்படி சொல்லவில்லை... என் தொழில் மேல் சத்தியம்... தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட 'லால் சலாம்' பட நடிகை தன்யா பாலகிருஷ்ணா

subiththira / 3 months ago

Advertisement

Listen News!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'லால் சலாம்'. இன்னும் சில தினங்களில் ரிலீஸ் ஆகவுள்ள இப்படம் மிகப்பெரிய சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. அதாவது நடிகை தன்யா பாலகிருஷ்ணா கடந்த ஆண்டுகளுக்கு முன்பாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் தமிழ்நாட்டு மக்களை இழிவுப்படுத்தும் விதமாக பதிவிட்டதாகவும், அவரை எப்படி 'லால் சலாம்' படத்தில் நடிக்க வைக்கலாம் என்றும் கடுமையான எதிர்ப்புகள் எழுந்துள்ளன.


இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நடிகை தன்யா பாலகிருஷ்ணா விளக்கம் ஒன்று அளித்துள்ளார். அதன்படி, “நான்‌ செய்யும்‌ தொழில்‌ மேல்‌ சத்தியம்‌. கடந்த சில நாட்களாகச்‌ சமூக வலைதளங்களில்‌ தமிழர்களை இழிவு படுத்தும்‌ விதமாக நான்‌ கூறியதாகப்‌ பகிரப்பட்டு வரும்‌ கருத்து நான்‌ கூறியதே அல்ல. 12 வருடம்‌ முன்பு இது நடந்தபோதே நான்‌ இதைத்‌ தெளிவுபடுத்த முயன்றேன்‌. அதையே இப்பொழுதும்‌ சொல்லிக்‌ கொள்ளவிரும்புகிறேன்‌. அந்தப் பதிவை நான்‌ பதிவிடவே இல்லை.


அந்த ஸ்கீர்ன்‌ ஷாட்‌, ஒரு ட்ரோல்‌ செய்யும்‌ நபரால்‌ உருவாக்கப்பட்டு பகிரப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக இதை ஆதாரபூர்வமாக நிரூபிக்க எவ்வளவு முயன்றும்‌ என்‌ சக்திக்கு உட்பட்டு என்னால்‌ முடியவில்லை. இந்த 12 வருடங்கள்‌, நான்‌ இதைப்‌பற்றி பேசாமல்‌ இருந்ததற்குக்‌ காரணம்‌ அந்த சம்பவம்‌ நடந்த சமயத்தில்‌ என்‌ மீதும்‌ என்‌ குடும்பத்தின்‌ மீதும்‌ வந்த அச்சுறுத்தல்கள்தான்‌. அதிலிருந்து விலகி இருப்பதே எனக்கு சரி என்று பட்டது. இப்பொழுது இந்த சந்தர்ப்பத்தில்‌ மீண்டும்‌ இதைத்‌ தெளிவுபடுத்த விரும்புகிறேன்‌. அந்த கருத்து நான்‌ கூறியதே அல்ல.


நான்‌ என்‌ சினிமா பயணத்தைத்‌ துவங்கியதே தமிழ்‌ சினிமாவில்‌ தான்‌. தமிழ்‌ சினிமாவில்‌ வேலை செய்ய வாய்ப்பு கிடைத்தமைக்கு நான்‌ என்றும்‌ நன்றி கடன்‌பட்டுள்ளேன்‌. அப்பொழுதும்‌ இப்பொழுதும்‌ என்‌ நெருங்கிய நண்பர்களில்‌ பலரும்‌ தமிழர்களே.


அதனால்‌, விளையாட்டுக்குக்கூட இப்படி ஒரு கருத்தை சொல்ல நான்‌ என்‌ கனவிலும்‌ நினைக்க மாட்டேன்‌. என்‌ ஆரம்ப காலங்களில்‌ தமிழ்‌ சினிமா ரசிகர்களும்‌ ஊடகங்களும்‌ கொடுத்த ஆதரவே இத்தனை வருடம்‌ தொடர்ந்து நடிக்க எனக்கு ஊக்கமாய்‌ அமைந்திருக்கிறது.


மனிதாபிமான அடிப்படையிலும்‌, நான்‌ யாரையும்‌ காயப்படுத்தும்‌ விதத்தில்‌ எந்த விதசொல்லையோ செயலையோ செய்யக்கூடியவள்‌ அல்ல. இந்த சம்பவம்‌ நடந்ததற்குப்‌ பின்‌ நான்‌ சில தமிழ்‌ திரைப்படங்களும்‌ சில தமிழ்‌ வெப்‌ சீரிஸ்களிலும்‌ நடித்துள்ளேன்‌. அப்போது இது போன்ற எதிர்வினைகள்‌ எதுவும்‌ நேரவில்லை.


சர்ச்சைக்குரிய இந்த கருத்து என்னுடையது இல்லை என்றாலும்‌, துரதிர்ஷ்டவசமாக என்‌ பெயர்‌ இதில்‌ சம்பந்தப்படுத்தப்பட்டுவிட்டது. அதனால்‌ நான்‌ தமிழ்‌ மக்களிடம்‌ முழு மனதாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்‌. என்‌ பெயரை வைத்து உங்களை காயப்படுத்தும்‌ விதமாக நடந்த செயலுக்கு வருத்தம்‌ தெரிவித்துக்கொள்கிறேன்‌" என கூறியுள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement