நடிகர் சாந்தானு நடிப்பில் தற்போது 'இராவண கோட்டம்' படம் தயாராகி வருகின்றது. இப்படத்தை கண்ணன் ரவி தயாரித்துள்ளார். மேலும் இதில் சாந்தனுவுக்கு ஜோடியாக நடிகை கயல் ஆனந்தி நடித்துள்ளார். அத்தோடு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் இப்படத்தின் உடைய டீசர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்களுக்கு அதிகரித்துள்ளது. இதனையடுத்து இராவண கோட்டம் திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பயில்வான் ரங்கநாதன் பேசுகையில் "இயக்குநர் பாக்யராஜ் படவிழாவில் கலந்து கொள்ளாததற்கு என்ன காரணம்" என்று கேட்டார் கேட்டார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் சாந்தனு "இந்த இராவண கோட்டம் படத்தில் நடித்த நடிகர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி என்பதால் அவர் வரவில்லை' எனக் கூறினார்.
அதுமட்டுமல்லாது "இதைப்பற்றி கேட்டு அந்த செய்தியை நீங்கள் சர்ச்சையாக்கினால், அதுவும் இந்த படத்திற்கு ப்ரோமோஷனாகத்தான் இருக்கும்" எனவும் கூறினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சாந்தனு "பயில்வான் ரங்கநாதன் என்னை பற்றிக்கூடத்தான் பேசியிருக்கிறார். அவர் பேச்சுக்கு ரெஸ்பான்ஸ் கொடுக்க கொடுக்கத்தான் அவர் ஓவரா பேசுகிறார். அவர் எதுக்கு மற்றவர்களைப்பற்றி பேசுகிறார் என்றால், பார்வையாளர்களுக்காக பேசுகிறார். எவ்வளவு பார்வையாளர் எண்ணிக்கை வருகிறதோ அவ்வளவு அதிகமாக சம்பாதிக்கலாம் அதற்காகத்தான் அப்படி பேசுகிறார்.என்னை பற்றி பேசுவதால் அவருக்கு வருமானம் வருகிறது என்றால், நன்றாக சம்பாதிக்கட்டும், அதற்காக இறங்கிப்போய் அவருடன் என்னால் சண்டை போட முடியாது" என்றார்.
மேலும் "ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசுவதே மாபெரும் தப்பு. அப்படி பேசினால் தான் அவருக்கு அதிகளவான பார்வையாளர்கள் கிடைக்கின்றனர் என்பதால் அவர் அப்படி பேசுகிறார். பயில்வான் பேசுவதை மற்றவர்கள் பார்ப்பதனால் தான் அவர் தொடர்ந்து இதுபோன்று பேசிவருகிறார்" என்கிறார்.
அதுமட்டுமல்லாது "முதலில் அவர் வீடியோவை மக்கள் பார்ப்பதை நிறுத்த வேண்டும். பயில்வான் ரங்கநாதனை யாராலும் நிறுத்த முடியாது, சொல்லி திருந்துவதாக இருந்தால் இந்நேரம் நிறுத்தி இருப்பார். எவ்வளவு பேர் சொல்லியும் அவர் திருந்தவே இல்லை, திருந்தாத ஜென்மத்திடம் சொல்வதில் ஒரு பயனும் இல்லை" எனவும் ஓப்பனாக பேசியிருக்கின்றார் நடிகர் சாந்தனு.
Listen News!