• Sep 08 2024

நான் பிழைப்பிற்காக சினிமாவிற்கு வந்தவன் சிம்பு மாதிரி எல்லாம் பண்ண முடியாது- வெளிப்படையாகக் கூறிய தனுஷ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் எப்போதும் இருதுருவங்கள் இருக்கும். அந்த வகையில் எம்.ஜி.ஆர் - சிவாஜி, ரஜினி - கமல், அஜித் - விஜய் என்ற பட்டியில் நீண்டு கொண்டே செல்கின்றது.இவர்கள் வரிசையில் முக்கிய இடம் பிடித்தவர்கள் தான் சிம்பு மற்றும் தனுஷ்.

இருவருமே வாரிசு நடிகர்கள் என்றாலும், சிம்புவை பொருத்த வரை சிறு வயதிலிருந்தே பிரபலம். ஆனால் கதாநாயகனாக முதல் சில படங்களில் ஜொலிக்கவில்லை. ஆனால் அதற்கு நேர்மாறாக தனுஷ் சிறு வயதில் நடிக்கவில்லை என்றாலும், அறிமுகப் படத்திலிருந்தே தொடர் வெற்றிகளை கொடுத்து வந்தார்.

இவ்வாறு போட்டியாளர்களாக இருந்தவர்கள்,தற்பொழுது நட்புடன் பழகி வருகின்றனர். இருவரும் ஒன்றாக சேர்ந்து வீடியோ கேம்ஸ் விளையாடுவது, நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது, வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்வது என நெருங்கிய நண்பர்கள் போல் இருக்கின்றனர்.

இந்நிலையில் தனுஷ் முன்னதாகக் கலந்து கொண்ட சிம்பு பட விழாவில் பேசியது இப்போது வைரலாகியுள்ளது. அதில், தான் துள்ளுவதோ இளமை படத்தில் நடித்துக் கொன்டிருந்த போது அதற்கு நடன இயக்குநராக வந்த அஷோக் மாஸ்டர் சிம்பு ஆடியதைப் பற்றி பெருமையாக பேசியதாகவும், அதே போல தன்னையும் ஆடச் சொன்னதாகவும், பின்னர் அந்தப் பாடலை பார்த்த பின்பு என்னால் எப்படி அப்படியெல்லாம் ஆட முடியும்? என்று கூறினாராம். அவர் பிறந்த உடனேயே சினிமாவிற்கு வந்தவர். நான் பிழைப்பிற்காக சினிமாவிற்கு வந்தவன். அப்போது மட்டுமல்ல, இப்போதும் என்னால் அவ்ரைப் போல் ஆட முடியாது என தனுஷ் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement