• Sep 21 2024

'சிம்புவை நினைத்து பெருமை கொள்கின்றேன் அவர் இல்லை என்றால் இது நடந்திருக்காது'- கவலையுடன் T.ராஜேந்திரன்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 80களில் பிரபல்யமான இயக்குநராகவும் நடிகராகவும் வலம் வந்தவர் T.ராஜேந்திரன். நடிகைகளைத் தொடாது நடித்த நடிகர் என்ற பெருமைக்கும் உரியவர் இவர். இவரது இயக்கத்தில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்களிடையே பேராதரவும் பெற்றிருக்கின்றன.

இதனைத் தொடர்ந்து அரசியலில் முழு மூச்சாக ஆர்வம் காட்டி வருவதால் நடிப்பிலிருந்து சற்று விலகியுள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முதல் திடீரென ஏற்பட்ட உடல்நல குறைவால், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

பின்பு குணமடைந்த ராஜேந்திரன் மேலதிக சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது . இந்த நிலையில் இவர் தற்பொழுது சிம்பு குறித்த ஒரு நெகிழ்ச்சியான பதிவொன்றை பதிவிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது

உயர் மருத்துவச் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்வதற்கு சிம்பு தான் காரணம். பெற்றோர் நலனுக்காகத் தனது படப்பிடிப்புக்களை ரத்து செய்து விட்ட கடந்த 12 நாட்களாக அங்கு சிகிச்சைக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்த வருகின்றார்.

இப்படி ஒரு மகனைப் பெற்றதற்கும் குருவாக இருந்து ஒரு நல்ல சிஷ்யனை உருவாக்கியதற்கும் நான் பெருமைப்படுகின்றேன் என்றும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement