பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6ஆவது சீசன் ஆனது கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது வெற்றிகரமாக இரண்டாவது வாரத்தை கடக்க உள்ளது. இதில் போட்டியாளர்களிடையே நாளுக்கு நாள் சண்டை, கோபம், அழுகை என உணர்ச்சிகளும் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன.
இந்நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் பங்குபற்றிய நிலையில், அதில் 21 ஆவது போட்டியாளராக மைனா நந்தினியும் இணைந்து கொண்டார். இப்போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் பரபரப்புக்கு பஞ்சமில்லாதவர்களாக உள்ளனர்.
இவ்வாறு இருக்கையில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரையும்1-11 வரை ராங்கிங் பிரகாரம் நிற்குமாறு பிக்பாஸ் கூறுகின்றார்.அவ்வாறு நிற்கும் போது அசல் கூறுகின்றார் எனக்கு அந்த நாளாவது இடம் வேணும் எனக்கு முதல் மூன்று இடமும் வேண்டாம்.அது தலைவர் போட்டிக்கானது.எனக்கு நாளாவது இடம் வேணும் .இந்த வீட்டில் எந்தவொரு விதி மீறலையும் நான் பண்ணல.எல்லார்கிட்டையும் ஜாலியா நடந்துக்கிறேன்.நான் இந்த இடத்திற்கு தகுதியானவன்.யாருடைய மனதையும் புண்படுத்தல.
தலைவர் பதிவிக்கு நான் இன்னும் ரெடி ஆகல அதுக்கு நான் கத்துக்கொண்டு இருக்கிறேன்.பார்த்து முடிவு பண்ணி 4வது இடத்தை தாங்க எனக் கூறியுள்ள விடயம் ரசிகர்களிடத்தே வைரலாகி வருகின்றது.
Listen News!